சிங்கப்பூர் அரசாங்கம் 122,400 'அஸ்ட்ராஸெனகா' கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை இந்தோனீசியாவின் பாத்தாம், ரியாவ் தீவுகளுக்கு செப்டம்பர் 28 செவ்வாய் அன்று வழங்கியது.
சிங்கப்பூருக்கான இந்தோனீசிய தூதர் திரு சுர்யோ பிராட்டொமோவிடம், ஜூரோங் துறைமுகத்தில் அந்த மருந்துகளை வெளியுறவு ஒ ஒப்படைத்தார்.
தடுப்பூசி மருந்துகள் நேற்று பாத்தாமிலுள்ள பத்து அம்பார் துறைமுகத்தை அடைந்தது.
"கொள்ளை நோய்க்கு எதிரான போராட்டம் நடக்கும் காலத்தில், இந்தோனீசிய அரசாங்கத்துக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால நல்லுறவின் அடையாளமாக இந்தத் தடுப்பு மருந்து வழங்கல் திகழ்கிறது," என அமைச்சர் தமது உரையில் கூறினார்.
சிங்கப்பூர் அரசாங்கம் அண்மையில் 500 டன் உயிர்வாயுவையும் இந்தோனீசியாவுக்கு அனுப்பி வைத்தது. அதற்கு முன், சிங்கப்பூர் சமூக பராமரிப்புக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இங்கு வந்தடைய இந்தோனீசியா வழிவகுத்தது.
வழங்கப்பட்ட 'அஸ்ட்ராஸெனெகா' தடுப்பு மருந்துகள், 'கோவெக்ஸ்' திட்டத்தின் அடிப்படையில், மற்ற நாடுகளுக்கு கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஆதரவளிக்க கொள்முதல் செய்யப்பட்டன.
அனைத்துலகத் திட்டமான 'கோவேக்ஸ்'சின் நோக்கம் வசதியில்லா நாடுகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதே ஆகும்.
மேலும் சிங்கப்பூர் புருணை நாட்டுக்கு 100,000 மொடர்னா தடுப்பூசி மருந்துகளை அனுப்பியுள்ளது. புருணை இதேயளவு தடுப்பூசி மருந்துகளை சிங்கப்பூருக்குப் பின்னர் திருப்பியளிக்கும் என்று கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் இந்த ஏற்பாடு, இரு நாட்டிலும் தடுப்பூசி போடும் கால அட்டவணை சீராக இயங்க துணை புரியும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
திங்கள்கிழமை அன்று 122,400 கொவிட்-19 தடுப்பு ஊசி மருந்துகளை சிங்கப்பூர் அரசாங்கம் தாய்லாந்துக்கு வழங்கியது.