திட்டமிட்ட குற்றச்செயல்களைப் புரியும் கும்பல் ஒன்றின் இரு தலைவர்களில் ஒருவரான 44 வயது ஹெர்மண்டோ அப்துல் தாலிப் என்பவருக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை, $20,000 அபராதம், எட்டு பிரம்படிகள் ஆகியவை விதிக்கப்பட்டன.
சட்டவிரோதப் போதைப்பொருளைக் கையாள்வது தொடர்பில் கும்பல் இயங்கி வந்ததாகக் கூறப்பட்டது. புதுவகை போதைப்பொருளைக் கடத்தி அதன் மூலம் பணம் பெறுவது, கும்பலின் குறியாக இருந்தது என்று அரசுத்தரப்பு நேற்று குறிப்பிட்டது.

