மகள்களைத் துன்புறுத்திய மாதுக்கு மூவாண்டு சிறை

மகள்களைத் துன்புறுத்திய மாதுக்கு மூவாண்டு சிறை

1 mins read
98859245-edb2-4b0a-8eae-0eb3b5c7eccf
-

ஆறு வயது, பத்து வய­தான தமது மகள்­க­ளைத் துன்­பு­றுத்தி, மூத்த மக­ளின் முன் ­பற்­களை உடைத்த இல்­லத்­த­ர­சிக்கு நேற்று மூன்று ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

வீட்­டுக்கு வந்த கண­வர் மக ளின் பற்­கள் உடைந்­தி­ருந்ததைப் பார்த்­து­விட்டு அவரை கேகே மகளிர் சிறார் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­போது, சிறு­மி­கள் துன்­பு­றுத்­தப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

போலி­சார் சம்­ப­வத்தை விசா­ரித்த சம­யத்­தி­லும் பிணை­யில் விடு­விக்­கப்பட்­டி­ருந்த நேரத்­தி­லும் அந்த மாது தமது துன்­பு­றுத்­தலை நிறுத்­த­வில்லை.

மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று காணொளி வழி தோன்றினார் அந்த 38 வயது மாது.

"தேவைப்­பட்­டால் பிள்­ளை­ களைக் கண்­டிக்­கலாம். ஆனால் அதைப் பொருத்­த­மான வழி­யில் செய்­ய­வும்," என்று நீதி­பதி திரு கெஸ்லர் சோ நேற்று தண்டனையை விதிக்கும் முன்னர் மாதிடம் கூறி­னார். அந்த மாது கோபத்­தை இனி பிள்­ளைக­ளின் மீது காட்­ட­மாட்­டார் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

கடந்த 16ம் தேதி, மகள்களைத் துன்புறுத்தியதன் தொடர்பிலான ஏழு குற்றச்சாட்டுகளை அந்த மாது ஒப்புக்கொண்டார். நேற்று மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

சிறுமிகளைக் கருத்தில் கொண்டு மாதின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு மகனும் உள்ளார். ஆனால் மகனின் வயது நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.

குற்றங்கள் நடந்தபோது மாதின் மனநிலை பாதிக்கப்படவில்லை என மனநலச் சோதனை காட்டியது.