மனைவியை தீயிட்டுக் கொல்ல முயன்றவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை

1 mins read
b9047f46-869a-44f3-a219-159ee35140a4
-

தன்­னை­விட்­டுப் பிரிந்து சென்ற மனை­வியை சமா­தா­னத்­துக்­குப் பல­முறை அழைத்­தும் வரா­த­தால் அவ­ரைக் கடத்­திச்­சென்று பெட்­ரோல் ஊற்றி எரித்­து­வி­டு­வ­தாக கண­வர் மிரட்­டி­னார். தன் உயி­ரை­யும் மாய்த்­துக்­கொள்­ளப் போவ­தாக அவர் அச்­சு­றுத்­தி­னார்.

தற்­போது 40 வய­தா­கும் முரு­கன் நண்­டோ­வுக்கு ஈராண்டு, இரண்டு மாதம், ஆறு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

2019 ஜூலை 2ஆம் தேதி இரவு 11 மணி­ய­ள­வில் துவாஸ் சோத­னைச் சாவ­டி­யைக் கடந்து செல்ல முயன்­ற­போது போலி­சார் அவ­ரைக் கைதுசெய்­த­னர். கடத்­தப்­பட்ட அவரது மனை­வி­யான 40 வயது கிருஷ்­ண­வேணி சுப்­பிர­ம­ணி­யத்­தை­யும் போலி­சார் மீட்­ட­னர்.

மலே­சியத் தம்­ப­தி­ய­ரான அவர்­கள், அந்­தச் சம­யத்­தில் ஜோகூர் பாரு­வுக்­குத் திரும்­பிக்கொண்­டி­ருந்­த­னர்.

திரு­மதி கிருஷ்­ண­வே­ணி­யின் உற­வி­னர் ஒரு­வர் முன்­கூட்­டியே கண­வ­ரின் திட்­டத்தை போலி­சுக்­குத் தெரி­வித்­தி­ருந்­தார்.

காணொ­ளிக் காட்­சி­மூ­லம் சிங்கப்­பூர் மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேற்று முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட முரு­கன் கடத்­தல், மிரட்­டல் உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­க­ளைக் ஒப்­புக்­கொண்­டார்.

2007ல் திரு­ம­ணம் புரிந்த அவர்­கள் ஜோகூர் பாரு­வில் வசித்து வந்­த­னர். ஆனால் திரு­மண வாழ்வு கசந்­தது. முரு­கன், மனை­வியை அடித்­துத் துன்­பு­றுத்­தி­னார் என்­றும் சூதாட்­டப் பழக்­கத்­தால் கட­னாளி ஆனார் என்­றும் கூறப்­பட்­டது.

பிறகு மனைவி வேறு ஆட­வ­ரு­டன் கள்­ளத்­த­ன­மா­கப் பழ­கிக் கொண்­டி­ருந்­தார் என்று முரு­கன் சந்­தே­கப்­பட்­டார். ஆனால் அதை மறுத்த கிருஷ்­ண­வேணி, கண­வரி­ட­மி­ருந்து பிரிந்து மண­மு­றி­வுக்கு விண்­ணப்­பித்­தார்.