சட்டவிரோதமாக வீட்டை உள்வாடகைக்கு விட்டவருக்கு 25 நாள் சிறைத் தண்டனை

2 mins read
5edba670-00a3-4364-8bdd-dc7de3e9e89f
-

தாம் வாட­கைக்கு குடி­யி­ருந்த வீட்டைப் பல­ருக்­கு சட்­ட­வி­ரோ­த­மாக உள்வாட­கைக்­கு­விட்ட ஆட­வர் ஒரு­வர், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) அதி­கா­ரி­கள் நடத்­திய திடீர் சோத­னை­களில் குறைந்­தது இரு­மு­றை­யா­வது மாட்­டிக்­கொள்­ளா­மல் தப்­பி­னார்.

அச்சோத­னை­கள் குறித்து தம் நண்­ப­ராக இருந்த வீவக அம­லாக்க அதி­காரி ஒரு­வ­ர் அவருக்கு முன்­கூட்­டியே தக­வல் அளித்ததே அதற்­குக் கார­ணம்.

ஆனால், இந்­தக் குற்­றம் வெளிச்­சத்­திற்கு வந்த பிறகு, இந்தியாவைச் சேர்ந்த தமன்­தீப் சிங், 23, தாம் குடி­யி­ருந்த வீட்­டி­லி­ருந்து வெளி­யேற வேண்­டி­யி­ருந்­தது.

அதி­கா­ரத்­துவ ரக­சி­யச் சட்டத்­தின்­கீழ், இரு குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டதை அடுத்து, நேற்று அவ­ருக்கு 25 நாள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த 2017ல் வீவக அம­லாக்க அதி­காரியாக இருந்த கலை­ய­ர­சன் கருப்­பை­யா, 55, அப்போது தமன்­தீப் குடி­யி­ருந்த வீட்டை சோதனை செய்­தபோது சந்தித்தனர். இரு­வரும் நண்­பர்களாகி அவ்­வப்­போது தொலை­பேசி­யில் உரை­யா­டி­னர்.

பிறகு வேறொரு வாடகை வீட்­டிற்­குக் குடி­பெ­யர்ந்­த தமன்தீப், அதனைச் சட்­ட­வி­ரோ­த­மாக மற்­ற­வர்க­ளுக்கு வாட­கைக்கு விட்­டார்.

ஒரே நேரத்­தில் அங்கு 12 அல்­லது 13 பேர்வரை வசித்­த­னர். ஆளுக்கு மாதவாடகையாக ஏறக்­கு­றைய $200 வசூ­லிக்­கப்­பட்­டது.

அந்த வீட்­டில் இருந்த அதிகக் கூட்­டம், இரைச்­சல் ஆகியவை குறித்து வீவ­க­வுக்கு புகார்­ கிடைத்­தது. நட்­பின் கார­ண­மாக, தமன்­தீப்பை பிரச்­சி­னை­யி­லி­ருந்து தப்­ப­வைக்க கலை­ய­ரசன் உத­வி­னார்.

தமன்­திப்­பிற்கு கலை­ய­ரசன் உதவி வந்­தது குறித்து கடந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் லஞ்ச, ஊழல் புல­னாய்­வுத் துறைக்­குத் தக­வல் கிடைத்­த­து. கலை­ய­ர­ச­னுக்கு கடந்த மாதம் 25 நாள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.