துவாஸ் வெடிப்பு: '2 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டேன்'

துவாஸ் வெடிப்பு: '2 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டேன்'

1 mins read
39de3f10-e6db-48ef-9b76-70fa5711c1c2
-

துவாஸ் வெடிப்­புச் சம்­ப­வம் பற்றி நடை­பெறும் பொது­வி­சா­ர­ணை­யில், வெடிப்­பின் வேகத்­தால் தாம் இரண்டு மீட்­டர் தூரத்­துக்­குத் தூக்கி எறி­யப்­பட்­ட­தாக நேற்று ஊழி­யர் ஒரு­வர் சாட்­சி­யம் அளித்­தார். அந்­த வேத­னை­மி­கு சம்­ப­வத்­தால் தாம் இன்­ன­மும் கெட்ட கனவு ­க­ளைக் காண்­ப­தா­க­ ரஹாட் அஸ்­ஃபாக்­குஸ்­மான், 30, கூறி­னார்.

பொது விசா­ர­ணை­யில் சாட்­சி­யம் அளித்­தி­ருக்­கும் காய­ம­டைந்த நான்­கா­வது ஊழி­யர் அவர் ஆவார்.

வெடிப்­புக்குப் பின்­னர் எழுந்து நின்ற அவர், தம் மீது தீ பற்­றி­யி­ருந்­த­தை­யும் தமது சட்­டை­ எரிந்து போய்­விட்­ட­தை­யும் உணர்ந்து, சட்­டையை உட­ன­டி­யா­கப் பிய்த்து எரிந்­த­தா­கக் கூறி­னார்.

தம் உடல் கரு­கிப்­போ­ன­தைப் பார்த்­த­தா­க­வும் வாயி­லி­ருந்து ரத்­தம் வெளி­வந்­த­தை­யும் உணர்ந்த­தா­க­வும் ரஹாட் விவரித்தார். நேற்று அவர் முகத்தில் வடுக்கள் காணப்பட்டன.

"நான் அழும்­போது கண்­ணீர் வர­வில்லை. பகல்­வெ­ளிச்­சத்­தில் வெளி­யில் எது­வும் தெளி­வா­கத் தெரி­வ­தில்லை," என்­றார் ரஹாட்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துவாசில் உள்ள தொழிற்சாலையில் நடந்த வெடிப்பில் மூன்று வெளி நாட்டு ஊழியர்கள் மாண்டனர்.