மின்சாரக் கட்டணம் 3.2% உயர்கிறது

நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 1) முதல் டிசம்பர் 31 வரை மின்சாரக் கட்டணம் உயரவிருக்கிறது. இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுடன் ஒப்புநோக்க, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.2 விழுக்காடு உயரும். எஸ்பி குழுமம் வியாழக்கிழமை (செப்டம்பர் 30) இதனைத் தெரிவித்தது.

மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் விலை அதிகரிப்பே மின்சார விலை உயர்வதற்கான காரணம் என விளக்கமளிக்கப்பட்டது.

ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு மின்சாரக் கட்டணம் 23.38 காசிலிருந்து 24.11 காசாக உயரும் (பொருள், சேவை வரிக்கு முன்பாக).

கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்குப் பிறகு, மின்சாரக் கட்டணம் இந்த அளவு உயரவிருப்பது இதுவே முதன்முறை.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக நான்கறை வீடுகளில் வசிப்போருக்கான சராசரி மின்சாரக் கட்டணம் மாதத்திற்கு $2.49 அதிகரிக்கும் என்று எஸ்பி குழுமம் கூறியது.

எரிசக்தி சந்தை ஆணையம் நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், காலாண்டுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணங்களை எஸ்பி குழுமம் மறுஆய்வு செய்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!