புக்கிட் தீமா சாலையில் போக்குவரத்து விளக்கு சிவப்புக்கு மாறியும், கார் ஓட்டுநர் ஒருவர் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதனால் சாலையைக் கடக்கத் தொடங்கிவிட்ட பாதசாரிகள் மூவர், தடுமாறிப் போய் அப்படியே நின்று விட்டனர். அவர்கள் வேகமாக நடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும்.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ்ந்தது.
SG Road Vigilante ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், பாதசாரிகள் சாலையைக் கடக்கத் தொடங்கிவிட்ட பிறகும் சாலையின் நடு தடத்தில் ‘நிசான்’ கார் ஒன்று நிற்காமல் செல்கிறது.
அதிர்ச்சியுற்ற பாதசாரிகள், கார் செல்வதைப் பார்த்துவிட்டு சாலையைக் கடந்தனர்.