மூன்று நாள் தீவிர சுத்தப்படுத்துதல் மற்றும் கிருமி நீக்கப் பணிகள் முடிந்ததும் பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் நேற்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த நிலையத்துக்குச் செல்லும் அனைத்து வாடகைதாரர்களும் ஊழியர்களும் அவரவர் பணியாற்றும் பகுதியைப் பொறுத்து வண்ணக் கைப்பட்டைகளை அணிந்திருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
பழங்கள், காய்கறிகள், உயர்ந்த பொருட்கள் போன்றவை அந்தப் பகுதிகள். குளிர் அறை மற்றொரு பகுதி. வாடகைதாரர்களும் ஊழியர்களும் தேவையில்லாமல் தங்கள் பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்குச் செல்லக்கூடாது.
பரிசோதனை செய்துகொள்ளும் காலக்கெடு 14 நாட்களுக்கு ஒரு முறையிலிருந்து ஏழு நாட் களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்திடமிருந்து 'பிசிஆர்' பரிசோதனை முடிவு கிடைக்கப் பெறாதவர்களுக்கு நேற்று நிலையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
புதன்கிழமை நிலவரப்படி, இந்த நிலையத்துடன் தொடர்புடைய 127 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மூன்று நான்கு லாரிகள் 5-10 நிமிடங்களுக்கு ஒரு முறை உள்ளே சென்றன.