'ராயல் கரீபியன்' சொகுசுக் கப்பலில் (படம்) பயணம் செய்ய விரும்பும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர், தாங்கள் பயணம் மேற்கொள்ளும்போது முழுமையாகத் தடுப்பசி போட்டிருக்க வேண்டும்.
இந்த விதிமுறை இன்று முதல் நடப்புக்கு வருகிறது என்று தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்த 'ராயல் கரீபியன்' இன்டர்நேஷனல் நிறுவனம், அக்டோபருக்கு முன் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தோர், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் பயணம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இரு சொகுசுக் கப்பல் நிறுவனங்களான 'ராயல் கரீபியன்' இன்டர்நேஷனல் நிறுவனமும் 'ட்ரீம் குருசஸ்' நிறுவனமும் தற்போது சொகுசுக் கப்பல் பயணங்களை சிங்கப்பூரிலிருந்து வழங்கி வருகின்றன.
அதில் 'ட்ரீம் குருசஸ்' நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் பயணங்களை மேற்கொள்வோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியதில்லை என்று அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சொகுசுக் கப்பல்களில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்ததால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் பயணங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் இந்த இரு கப்பல் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அந்தப் பயணங்கள் எந்த இடத்திலும் நிற்காது. பயணத்துக்கு முன் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

