பாய லேபார்: தரைவீடுகள் உள்ள பகுதியில் உடைக்கப்பட்ட இரண்டாவது கார் கண்ணாடி

1 mins read
846d07ae-68bc-4c5b-b9ae-d31ad5994787
கடந்த 22ஆம் தேதி சேதப்படுத்தப்பட்ட கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

பாய லேபார் வட்­டா­ரத்­தில் கடந்த 22ஆம் தேதி முன்­பக்­கக் கண்­ணாடி உடைக்­கப்­பட்ட காரின் உரி­மை­யா­ளர், அதே போன்ற சம்­ப­வம் மீண்டும் நடந்­தது என்று தெரிந்­த­வு­டன் போலி­சில் புகார் அளித்­தி­ருக்­கி­றார்.

அந்த வட்­டார தரை வீடு­களில் நிறுத்­தப்­பட்ட இரண்டு கார்­க­ளின் கண்­ணா­டி­கள் இது­வரை உடைக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த 27ஆம் தேதி பின்­னி­ர­வில் அந்­தப் பகு­தி­யில் வேறு ஒரு காரின் கண்­ணாடி உடைக்­கப்­பட்­ட­தா­க­வும் அச்­சம்­ப­வம் காரில் உள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வா­ன­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டது.

அது பற்றி படித்­த­வு­டன் தமது காருக்கு நடந்த சேதம் பற்றி புகார் அளித்­த­தாக கடந்த 22ஆம் தேதி சேதப்­படுத்தப்பட்ட காரின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­தார்.

கார் கண்­ணா­டி­யைப் பழு­து­பார்த்­தால் போதும் என்று தாம் முத­லில் நினைத்­த­தாக அந்த 44 வயது நபர் கூறி­னார். ஆனால் ஒரு வாரத்­துக்­குப் பின்­னர் மீண்­டும் அவ்­வாறு நடந்­தி­ருப்­ப­தால், கார்­க­ளைச் சேதப்­ப­டுத்­திய நபர் இன்­ன­மும் அப்­ப­கு­தி­யில் நட­மா­டிக் கொண்­டி­ருக்­க­லாம் என்று கரு­தியதாக அவர் சொன்­னார்.

தமது வீடு உள்ள வரிசையில் தமது கார் மட்­டும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டது என்றும் காரில் ஏதும் திருட்டு போக­வில்லை என்­றும் அவர் குறிப்பிட்டார்.