மியன்மார் குறித்து சிங்கப்பூர், அமெரிக்கா கவலை, கலக்கம்

மியன்மார் குறித்து சிங்கப்பூர், அமெரிக்கா கவலை, கலக்கம்

2 mins read
f4b132e7-4f2b-4bda-9c6b-703ebc908c87
மியன்மாரில் நடந்த ராணுவப் புரட்சிக்கு எதிராக தாவெய் என்ற நகரில் கடந்த மே மாதம் 23 ஆம் தேதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: ஏஎஃப்பி -

வெளியுறவு அமைச்சர்: ஏற்கெனவே பொருளியல் சவால்; அதோடு கொவிட்-19 பாதிப்பு

மியன்­மார் மக்­க­ளின் நிலை குறித்து சிங்­கப்­பூ­ரும் அமெ­ரிக்­கா­வும் மிக­வும் கவலை அடைந்து இருப்பதா­க­வும் மனக் கலக்­கத்­தில் இருப்­ப­தா­க­வும் வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பாலகிருஷ்­ணன் புதன்­கி­ழமை தெரி­வித்­தார்.

மியன்­மார் மக்­கள் ஏற்­கெ­னவே கடுமையான பல்­வேறு பொரு­ளி­யல் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கிறார்­கள் என்­றும் அவற்­றோடு கொவிட்-19 கிரு­மித்­தொற்று அந்த நாட்டை மேலும் பாதித்து இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்து உள்­ளது.

டாக்­டர் விவி­யன் வாஷிங்­டன் சென்று இருந்­தார். அமெரிக்க பய­ணத்­தின்போது அந்த நாட்­டின் வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கனு­டன் டாக்­டர் விவி­யன் பேச்சு நடத்­தி­னார்.

அந்­தப் பேச்­சின்­போது மியன்­மார் விவ­கா­ரம் விவா­திக்­கப்­பட்­ட­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

மியன்­மார் தொடர்­பில் சிங்­கப்­பூ­ருக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் பல கவ­லை­கள் இருப்­ப­தா­கத் தெரி­வித்த அமைச்­சர், மியன்­மா­ரில் அதி­க­ரிக்­கும் ஏழ்மை, பிப்­ர­வரி 1ஆம் தேதி இடம்­பெற்ற ராணு­வப் புரட்சி, அதன் விளை­வாக ஏற்­பட்டுள்ள வன்­செ­யல் ஆகி­ய­வற்றை அதற்­கான கார­ணங்­க­ளாகச் சுட்­டிக்­காட்­டி­னார்.

மியன்­மா­ரின் பிரச்­சி­னைக்­கு அந்த நாடு­தான் தீர்வு­ கா­ண­வேண்டும் என்று சிங்­கப்­பூரும் அமெ­ரிக்­கா­வும் நம்புவதா­க­வும் டாக்­டர் விவி­யன் குறிப்­பிட்­டார்.

மியன்­மார் மக்­கள், தலை­வர்­கள், அர­சி­யல் தலை­வர்­கள், எல்­லா­ரும் ஒன்றுகூடி, நாட்­டின் ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்­தைக் கருத்­தில் கொண்டு கலந்து பேசி தீர்­வு­கா­ண­வேண்­டும் என்று அமைச்­சர் கருத்துக் கூறி­னார்.

"இப்படி ஓரு தீர்வுகாண பல­வந்­த­மாக நாம் நெருக்க முடி­யாது. இருந்­தா­லும் இதற்கு ஊக்­க­மூட்­ட­லாம். அதைச் சாதிக்­கும்­படி நமக்கே உரிய வழி­களில் அவர்களை நாம் வலி­யு­றுத்­த­லாம்," என்று தெரி­வித்த டாக்­டர் விவி­யன், என்­றா­லும் அத்தகைய பேச்சுவார்த்தைக்கான அறி­குறி இனி­மேல்­தான் தனக்­குத் தெரி­ய­வ­ர­ வேண்­டும் என்­றார்.

மியன்­மா­ருக்கு உதவ ஆசி­யான் முயற்­சி­ எடுத்­து­ வ­ரு­கிறது.

புரு­ணை­யின் இரண்­டா­வது வெளி­யு­றவு அமைச்­சர் யூசோப், மியன்­மா­ருக்­கான ஆசி­யா­னின் சிறப்­புத் தூத­ராக கடந்த ஆகஸ்ட்­டில் நிய­மிக்­கப்­பட்­டார்.

மியன்­மா­ரில் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் சந்­திக்க அந்­தத் தூத­ருக்கு அனு­மதி கிடைக்­கும்; மியன்­மார் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தையைத் தொடங்க அவ­ரால் உதவ முடி­யும் என்ற நம்­பிக்­கை­யு­டன் தாங்­கள் காத்து இருப்­ப­தா­க­வும் வெளியுறவு அமைச்சர் டாக்­டர் விவி­யன் குறிப்­பிட்­டார்.