கர்ப்பிணியாக இருந்த தம்மை கொவிட்-19 கிருமி தொற்றி, மகப்பேற்றில் சிக்கல்களை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சி திருவாட்டி சுஸேனா டேங், தமது பேறு காலத்தின் 30வது வாரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இணையத்தில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது பற்றி பல்வேறு கருத்துக்களை வாசித்த திருவாட்டி டேங், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முதலில் தயங்கினார்.
ஆனால், "நான் இது குறித்து சுயமாகக் ஆராய்ந்தேன். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளைப் பற்றி நான் படித்தேன்.
கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் தீமைகளைவிட நன்மைகள் அதிகமாக இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தேன்," என கூறினார்.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கர்ப்பிணிகளுக்கு கொள்ளை நோய் தொற்றினால் பேறுகாலத்தில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் அவ்வாறு ஏற்படுகையில் பிரசவத்திற்குப் பிறகு, தனிமைப்படுத்தலால் குழந்தையைப் பிரிய தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
கேகே மகளிர் சிறார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட திருவாட்டி டேங், சென்ற மாதம் தமது மகனை ஈன்றெடுத்தார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் 85 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என சுகாதார , தமது ஃபேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி பதிவிட்டார்.
அதில் 20 விழுக்காட்டினருக்குக் உயிர்வாயு தேவைப்படுவதாகவும் 10 விழுக்காட்டினருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இதுவரை உயிர்வாயு தேவைப்படும் நிலை வரவில்லை என்பதையும் அமைச்சர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.