தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க மசோதா

1 mins read
0a93aa77-bebe-405f-a4bb-8878339b77c1
மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா, பாடாங்கை தேசிய நினைவுச் சின்னம் என்று அரசிதழில் குறிப்பிட வழிவகுக்கும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

நினை­வுச் சின்­னங்­க­ளைப் பாது­காக்­கும் சட்­டத்­திற்கு மாற்­றங்­கள் உத்­தே­திக்­கப்­பட்­டு உள்­ளன.

இப்­போ­தைய நின­வுச் சின்­னங்­களை இன்­னும் சிறந்த முறை­யில் பாது­காப்­ப­தும் நினை­வுச் சின்­னங்களாகக் கரு­தப்­படும் இடங்­களின் வகைளை அதி­கப்­படுத்து வதும் மாற்­றங்­க­ளின் நோக்­கம்.

நினை­வுச் சின்­னங்­க­ளைப் பழமை­கெ­டா­மல் பாது­காப்­பு (திருத்­தம்) மசோதா நேற்று நாடாளுமன்­றத்­தில் தாக்­கலானது.

அந்த மசோதா நிறை­வே­றும்­பட்­சத்­தில், வர­லாற்று அடை­யா­ளச் சின்­னங்­க­ளைத் தன்­னி­டத்தே கொண்டிராத பாடாங் போன்ற இடங்­களைத் தேசிய நினைவுச் சின்­னங்­க­ளாக அர­சி­த­ழில் குறிப்­பிட வழி ஏற்­படும்.

தேசிய மர­பு­ட­மைக் கழ­கத்­தின் அதி­கா­ரங்­களை விரி­வு­ப­டுத்­து­வதும் மசோ­தா­வின்­ நோக்­கம்.

தேசிய நினை­வுச் சின்­னங்­களில், அவற்­றின் முக்­கி­யத்­து­வத்­தைக் குறைக்­கும், பண்­பு­க­ளைச் சிதைக்­கும் வகை­யில் அங்­கீ­கா­ர­மற்ற வேலை­கள் நடக்­கா­மல் அவற்­றைப் பாது­காக்­க­வும் உத்­தேச மாற்றங்கள் வழி­கோ­லும்.