'அதிகாரத்தை அரசு தவறாக கையாளுவதைவிட வெளிநாட்டுத் தலையீடு அதிக ஆபத்தானது'

2 mins read
03ac913d-d3db-49b7-8a19-e97e2cde635e
-

வஞ்­ச­க­மான ஓர் அர­சாங்­கம் தன்­னு­டைய அதி­கா­ரத்தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தக்கூடிய அபாயத்தைவிட வஞ்சக எண்­ணத்­து­டன் ஏற்படக் கூடிய வெளி­நாட்டு தலை­யீடு அபாயம் அதிகம் உள்ளதாக உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு தலை­யீடு தடுப்பு நட­வ­டிக்­கை­கள் உத்தேச சட்­டம் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்­டது. அதில் கலந்­து­கொண்டு பேசிய அமைச்­சர், அந்த மசோதா நிறை­வேற்­றப்­பட்­டால் அதன் கீழ் அதி­கா­ரி­க­ளுக்குக் கொடுக்­கப்­படும் பரந்த அள­வி­லான அதி­கா­ரங்­கள் நியா­யம்­தானா என்று எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­தார்.

புதிய உத்­தேச சட்­டத்­தின்­கீழ் கொடுக்­கப்­பட்டு உள்ள அதி­காரங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை உச்ச நீதி­மன்ற நீதி­ப­தியைத் தலை­மை­யா­கக்கொண்ட ஒரு நடு­வர் குழு ஆராயமுடி­யும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

அந்­தக் குழு­வின் முடிவு வெளி­யி­டப்­படும். மக்­கள் அதைப் பார்த்து தங்­க­ளுக்­குத் தாங்­களே மதிப்­பிட்­டுக்கொள்­ள­லாம் என்­றும் திரு சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் போன்ற அறி­வு­மிக்க மக்­க­ளைக்கொண்ட நாடு­களில் கடைசி முடிவு மக்­க­ளைப் பொறுத்தே இருக்­கும் என்­றாரவர். சிங்­கப்­பூ­ரில் வஞ்­சக எண்­ணத்­து­டன் கூடிய அர­சாங்­கத்­திற்கு மக்­கள் ஒரு நாளும் ஆத­ரவு அளிக்­க­மாட்­டார்­கள் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

உள்­நாட்டுப் பாது­காப்­புச் சட்­டத்தை சிங்­கப்­பூ­ரர்­கள் புரிந்­து­கொண்டு அதற்­கான தேவையை ஏற்­றுக்­கொண்டு இருக்­கி­றார்­கள் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

தங்­க­ளு­டைய சதிச் செயல்­களை அரங்­கேற்­று­வ­தற்கு முன்­ன­தா­கவே பயங்­க­ர­வா­தி­கள் கைது­செய்­யப்­பட இந்­தச் சட்­டம் அனு­ம­திக்­கிறது. குற்­ற­வி­யல் சட்­டத்தை (தற்­கா­லிக ஏற்­பா­டு­கள்) மற்­றொரு எடுத்­துக்­காட்­டாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­களை­யும் போதைப்­பொ­ரு­ளைக் கையா­ளு­வோ­ரை­யும் விசா­ர­ணை­யின்றி தடுத்து வைக்க இந்­தச் சட்­டம் வகை செய்­கிறது.

சமூ­கத்­தின் உரி­மை­க­ளைச் சமப்­ப­டுத்­து­வதைக் கருத்­தில் கொள்­ளா­மல், குற்­றம் சாட்­டப்­படும் ஒரு­வ­ரின் உரி­மை­களை மட்­டும் அடிப்­ப­டை­யா­கக்கொண்டு ஒவ் வொன்­றை­யும் அணு­கும் அணுகு­மு­றையைப் பின்­பற்­றி­னால் நாம் இன்று பெற்­றி­ருக்­கும் பாது­காப்­பான, குற்­றச் செயல்­கள் அற்ற சமூ­கத்தை எட்­டி­யி­ருக்க முடி­யாது என்று அமைச்­சர் கூறி­னார்.

வெளி­நாட்டுத் தலை­யீட்­டால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதக பிரச்­சினைகளை வழக்­க­மான நீதி­மன்ற நடை­மு­றைப்­படி கையா­ளு­வது சாத்­தி­யமா என்று கேள்வி எழுப்­பிய அமைச்­சர், இந்த உத்­தேச சட்­டம் பய­ன­ளிக்­கக்­கூ­டிய ஏற்­பா­டு­களை அர­சாங்­கத்­திற்கு ஏற்­ப­டுத்­தித் தரு­வ­தாக கூறினார்.

உத்­தேச சட்­டம் வெளி­நாட்டுத் தலை­யீட்­டுக்கு எதி­ரான முழு­மை­யான பாது­காப்­பாக இருக்­காது என்­றா­லும் அது உதவமுடி­யும் என்று அமைச்­சர் குறிப்பிட்டார்.