வெளி மிரட்டல்களைக் கையாள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் அரசிடம் இருப்பதாக தொகுதிஇல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான புதிய சட்டம் ஏன் தேவை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வெளிநாட்டுத் தலையீடு (தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் நேற்று இரண்டாவது வாசிப்புக்கு வந்தது.
அதில் கலந்துகொண்டு பேசிய திரு லியோங், தன்னுடைய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சிங்கப்பூர் விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
இருந்தாலும் இந்த மசோதாவை அதன் இப்போதைய வடிவில் தனது கட்சி ஆதரிக்க இயலாது என்றார் அவர்.
மேலும் சட்டங்களை இயற்றி நம் சொந்த மக்களைக் கட்டுப்படுத்துவது, வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான தலைசிறந்த பாதுகாப்பு அல்ல.
அதற்குப் பதிலாக, தேசிய பாதுகாப்பு மிரட்டல்கள் பற்றி நம் மக்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்துவதுதான் சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டார்.