'புதிய கொவிட்-19 சம்பவங்கள் மருத்துவமனைகளை பாதித்தன'

'புதிய கொவிட்-19 சம்பவங்கள் மருத்துவமனைகளை பாதித்தன'

2 mins read
c2d28373-8b68-4c81-839f-6461af59013f
-

'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி­யான 70 வய­தைத் தாண்­டி­யோரை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்க முன்­ன­தாக 12 மணி­நே­ரம் ஆகும். இப்­போது 48லிருந்து 72 மணி­நே­ரம் ஆகிறது. கொவிட்-19 கிரு­மித்­தொற்றுச் சம்­ப­வங்­கள் கணி­ச­மாக அதி­க­ரித்­த­தால் சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரத் துறையில் நெருக்கடி ஏற்பட்டதற்கு இது ஓர் உதா­ர­ணம் என்று சுகா­தா­ரத்­துக்­கான மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­யுள்­ளார்.

பொது மருத்­து­வ­ம­னை­களில் உள்ள படுக்­கை­களில் சுமார் 15 விழுக்­காட்­டுப் படுக்­கை­கள் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக டாக்­டர் ஜனில் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரில் சுமார் 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு அவை போது­மானதாக இருக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார். அவ­சர சிகிச்சை தேவை உள்­ள­வர்­க­ளுக்­கென சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை மருத்­துவ வாக­னங்­கள் ஒதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்­ளன. அத­னால் கொவிட்-19 நோயா­ளி­களைப் பல்­வேறு சுகா­தா­ரப் பரா­மரிப்பு வசதிகளுக்குக் கொண்டு செல்ல சுகா­தார அமைச்சு கூடுதலாக 95 மருத்­துவ வாக­னங்­களைத் தயார்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவர் கூறி­னார்.

கடந்த மூன்று மாதங்­களில் மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்சை பிரி­வு­களில் கொவிட்-19 நோயாக­ளுக்­கான படுக்­கை­களின் பயன்பாடு 26லிருந்து 53 விழுக்­காட்­டிற்கு உயர்த்­தப்­பட்­ட­தா­க­வும் டாக்­டர் ஜனில் தெரி­வித்­தார்.

தனி­மைப்­ப­டுத்­தப்­படும் நோயாளி களுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள படுக்­கை­க­ளின் பயன்­பாடு 56லிருந்து 86 விழுக்­காட்­டிற்கு உயர்ந்­துள்­ள­தாக அவர் சொன்­னார். சமூ­கப் பரா­ம­ரிப்பு வச­தி­களில் உள்ள படுக்­கை­க­ளின் பயன்­பா­டும் 10லிருந்து 35 விழுக்­காட்­டிற்கு அதி­க­ரித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார். கொவிட்-19 நோயா­ளி­களில் சுமார் இரண்டு விழுக்­காட்­டி­ன­ருக்­குக் கூடு­தல் உயிர்­வாயு அல்­லது தீவிர சிகிச்சை பிரி­வில் சிகிச்சை தேவைப்­ப­டு­வ­தாக டாக்­டர் ஜனில் தெரி­வித்­தார்.

தீவிர சிகிச்சை பிரி­வு­க­ளின் நில­வ­ரத்தை அர­சாங்­கம் கூர்ந்து கவ­னித்து வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார். தீவிர சிகிச்சை பிரி­வு­களில் கூடு­த­லாக 74 படுக்­கை­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தேவைப்­பட்­டால் குறு­கிய காலத்­தில் மேலும் சில படுக்­கை­க­ளைச் சேர்க்­க­மு­டி­யும் என்­றும் டாக்­டர் ஜனில் கூறி­னார். கிட்­டத்­தட்ட 400 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அத­னால் மருத்­து­வ­ம­னை­களின் மனி­த­வள நில­வ­ரத்­தை­யும் அர­சாங்­கம் அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக அவர் சொன்­னார்.