தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈசூனில் கத்தியைக் கொண்டு தாக்கிய இருவர் கைது

1 mins read
94644c22-5fdb-4d83-9144-d464d1f363fb
சம்­பவ இடத்­தில் ஒரு நீள­மான கத்தி கண்­டெ­டுக்­கப்­பட்­ட­து. தாக்குதல் நடத்திய இருவரும் நான்கு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -

ஈசூன் அவென்யூ 6ல் ஒரு­வரை வெட்­டி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 39 வயது ஆட­வர் ஒரு­வ­ரும் 49 வயது மாது ஒரு­வ­ரும் நேற்று முன்­தி­னம் இரவு கைது செய்­யப்­பட்­ட­னர்.

தங்­க­ளுக்கு ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5.30 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக நேற்று போலி­சார் தங்­கள் அறிக்­கை­யில் தெரி­வித்­த­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு பல வெட்டுக்­கா­யங்­கள் இருந்­த­தா­க­வும் அவர் சுய நினை­வு­டன் மருத்­து­வ­மனைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உட­லில் எந்­தப் பகு­தி­யில் அவ­ருக்கு வெட்­டுக்­கா­யங்­கள் இருந்­தன என்ற விவ­ரங்­களை போலி­சார் வெளி­யி­ட­வில்லை.

சம்­பவ இடத்­துக்கு போலிஸ் வரு­வ­தற்குள் தாக்­கு­தலை மேற்­கொண்ட இரு­வ­ரும் அங்­கி­ருந்து தப்­பித்துவிட்­ட­னர்.

உட்­லண்ட்ஸ் போலிஸ் பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் குற்­றம் நிகழ்ந்த நான்கு மணி நேரத்­துக்­குள் தாக்­கு­த­லில் ஈடு­பட்­டோரை அடை­யா­ளம் கண்­ட­னர்.

சம்­பவ இடத்­தில் ஒரு நீள­மான கத்தி கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தா­க­வும் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் அறி­மு­க­மா­ன­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்ட ஆட­வர் மீது வேண்­டு­மென்றே ஆபத்­தான ஆயுதத்­தால் காயம் விளை­வித்­த­தற்­காக இன்று குற்­றம் சாட்­டப்­படும். குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு ஏழாண்டு சிறைத் தண்­டனை, அப­ரா­தம், பிரம்­படி அல்லது இவற்றில் ஏதாவது இரண்டு தண்­ட­னை­கயாக விதிக்கப்படலாம்.கைது செய்­யப்­பட்ட பெண் மீது தொட­ர்ந்து விசா­ரணை நடந்து வரு­கிறது என்றும் போலிசார் தெரிவித்தனர்.