வரும் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து அதிகமான வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். ஆயினும், கொவிட்-19 தடுப்பூசி போட்டுள்ளோரின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசிலீக்கப்படும் என்று மனித வள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பணிப்பெண்களுக்கு நுழைவு அனுமதி கோரி இம்மாதம் 15ஆம் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கூறினார். ஆயினும், பொதுச் சுகாதார காரணங்களுக்காக ஒரு வரம்புக்குட்பட்டே நுழைவு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார். இவ்வட்டாரத்தில் கிருமிப் பரவல் சூழல் மேம்பட்டால், மேலும் அதிகமான பணிப் பெண்களுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என்றார் அமைச்சர். பாட்டாளிக் கட்சி எம்.பி. டெனிஸ் டான் எழுப்பிய கேள்விக்கு எழுத்து வழி அளித்த பதிலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.