தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணி மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகம்

2 mins read
b5cc3e9c-b2f4-4b37-a227-a2d009da19f2
-

கடற்­து­றைக்­கும் கடல்­சார் பொறி­யி­யல் துறைக்­கும் உள்­ளூர் ஊழி­யர்­களை ஈர்க்க இரண்டு பணி மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

டிரா­ஃப்­டிங் வல்­லு­நர்­கள், தர நிபு­ணர்­கள் ஆகி­யோரை ஈர்ப்­பதே இத்­திட்­டங்­க­ளின் இலக்கு.

சம்­ப­ளம், திறன்­கள், வேலை தொடர்­பான பங்­க­ளிப்பு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் கட்­டுக்­கோப்­பான, முற்­போக்­கான பாதையை இந்தத் திட்­டங்­கள் வழங்­கும்.

2021ஆம் ஆண்டு கடற்­துறை வாரக் கருத்­த­ரங்­கில் இத்­திட்­டங்­கள் குறித்து அறி­விக்­கப்­பட்­டது.

இத்­திட்­டங்­களில் பங்­கு­பெ­று­வோ­ருக்­குப் பயிற்சி அளிக்­கப்­படும்.

வேலைக்­குத் தேவை­யான திறன்­கள் அவர்­க­ளுக்­குக் கற்­றுத்­த­ரப்­படும்.

இதன்­மூ­லம் அந்­தத் துறை

­க­ளின் உற்­பத்­தித்­தி­றன் மேம்­படும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

அது­மட்­டு­மல்­லாது, அவ­ர­வர் திறன்­க­ளைப் பொறுத்து சம்­ப­ளம் பெற­லாம்.

ஆரம்­ப­நி­லை­யி­லி­ருந்து உயர்­

ப­தவி நிலை வரை­யி­லும் திறன்­களை வளர்த்­துக்­கொள்­ள­வும் கூடு­தல் அனு­ப­வம் பெற­வும் இந்த அணுகு­முறை வகை செய்­யும்.

இத­னால் இத்­து­றை­களில் நீண்­ட­கால வேலை வாய்ப்­பு­க­ளைப் பெற முடி­யும்.

இத்­திட்­டங்­கள் குறித்து தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­ஸின் வேலை நிய­மன, வேலை வாய்ப்­புக் கழ­கம், சிங்­கப்­பூர் கடற்­துறை சங்­கம், என்­டி­யு­சி­யின் மின்­ன­ணு­வி­யல், கடற்­துறை மற்­றும் பொறி­யி­யல் குழு­மம் ஆகி­யவை இணைந்து நேற்று அறி­வித்­தன.

"கடற்­து­றை­யும் கடல்­சார் பொறி­யி­யல் துறை­யும் இணைந்து சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­திக்கு $3.6 பில்­லி­யன் பங்­க­ளித்­தன. உல­க­ளா­விய வர்த்­தக நடு­வ­மாக சிங்­கப்­பூர் கொண்­டுள்ள நிலையை உறுதி செய்ய இது மிக­வும் முக்­கி­யம்."

"2025ஆம் ஆண்­டுக்­குள் இந்­தத் தொகையை $5.8 பில்­லி­ய­னாக உயர்த்­த­வும் 1,500 புதிய வேலை­களை உரு­வாக்­க­வும் திட்­டங்­கள் இலக்கு கொண்­டுள்­ளன," என்று மூன்று அமைப்­பு­களும் தெரி­வித்­தன.

"இந்­தத் திட்­டத்­திற்­காக தேர்்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்த இரண்டு வேலை­களும் என்­றென்­றும் முக்­கி­ய­மா­னவை. கடற்­துறை, கடல்­சார் துறை ஆகி­ய­வற்­றுக்கு இவை இன்­றி­ய­மை­யா­தவை," என்று என்­டி­யுசியின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் கூறி­னார்.

மேலும் சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர் பற்­றாக்­குறை நிலவி வரு­வ­தால் இத்­திட்­டங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­

ப­டு­வது மிக­வும் முக்­கி­யம் என்­றார் அவர். இளையர்களை ஈர்க்க இத்துறைகள் மாற வேண்டும் என்று குறிப்பிட்ட திரு இங், அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கைத் தொழிலை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கூறினார்.