அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து இன்னும் அதிகமான பணிப்பெண்கள் சிங்கப்பூர் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே இங்கு அனுமதிபெற பரிசீலிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பணிப்பெண்களுக்கான விண்ணப்பங்களை அரசாங்கம் வரும் 15ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தார்.
உடல்நலமில்லாதவர்கள், முதியவர்கள், சிறப்புத் தேவை உள்ளவர்கள் இருக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார். ஆனால், பொதுச் சுகாதார காரணங்களுக்காக இல்லப் பணிப்பெண்கள் இங்கு வர மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்றும் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் உள்ள பெருந்தொற்றுச் சூழலை அது பொறுத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டானின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.