முதியவருக்கு உதவிய கட்டுமான ஊழியர்

முதியவர் ஒருவருக்கு கட்டுமான ஊழியர் ஒருவர் தன்னலம் பாராது உதவுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

போத்தோங் பாசிரில் செயிண்ட் ஆன்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரிக்கு முன்னால் உள்ள கட்டுமானத் தளத்திற்கு அருகே திங்கட்கிழமை (அக்டோபர் 4) மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் பார்த்த மைக்கல் என்பவர், அதைக் காணொளி எடுத்தார்.

அட்டைப் பெட்டிகளைக் கொண்ட தள்ளுவண்டி ஒன்றை அந்தக் கட்டுமான ஊழியர் அந்த முதியவருடன் தள்ளிச் செல்வதை காணொளி காட்டியது.

தாம் இதுவரை கண்டுள்ள “அற்புதமான காட்சிகளில்” இதுவும் ஒன்று என மைக்கல் கூறுவதை அந்தக் காணொளியில் கேட்க முடிகிறது.

அந்த ஊழியருக்குச் சொந்த வேலை இருந்திருக்கலாம். அப்படி இருந்தும். அந்த முதியவருக்கு உதவ அவர் முன்வந்தார். மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்தியது. இப்போதைய தொற்று நெருக்கடிச் சூழலில் இத்தகைய நற்செயல்கள்தான் சிங்கப்பூருக்கு அதிகம் தேவை.
மைக்கல்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!