கிருமித்தொற்றைக் குணப்படுத்தும் மாத்திரை: முதலில் சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் தர வேண்டும்

கிருமித்தொற்றைக் குணப்படுத்தும் மாத்திரை: முதலில் சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் தர வேண்டும்

1 mins read
a7f65ad6-c6c4-4ceb-9719-42301eb6a863
-

டெல்டா உட்­பட எல்லா உரு­மா­றிய கொரோனா வகைகளையும் குணப்­ப­டுத்­தக்­கூ­டிய மாத்­தி­ரைக்கு சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் ஒப்­பு­தல் வழங்­கிய பின்­னர் அது இங்கு கிடைக்­கும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

'மோல்­னு­பி­ர­விர்' எனும் இந்த மாத்­தி­ரையை வாங்க எம்­எஸ்டி மருந்து நிறு­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் செய்­து­கொண்­ட­தை­யும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் அமைச்சு நேற்று உறு­திப்­ப­டுத்­தி­யது.

'மோல்­னு­பி­ர­விர்' மாத்­திரை கொவிட்-19 கிருமி தன்னை நகல் எடுத்­துக் கொண்டு பெருக உத­வும் 'என்­ஸைம்' அதா­வது நொதி­யத்­தைக் குறிவைக்­கிறது.

அந்த நொதி­யத்­தின் மர­ப­ணுத் தொட­ரில் மாத்­திரை தவ­று­களை ஏற்­ப­டுத்தி, நோயைக் குணப்­ப­டுத்­து­கிறது.

'காமா', 'டெல்டா', 'மூ' உள்­ளிட்ட கொரோ­னா­வின் எல்லா உரு­மா­றிய வகை­க­ளி­லும் இந்த நொதி­யம் இருப்­ப­தால், அவற்றுக்கு எதிராக மாத்­திரை செயல்­ தி­றன் மிக்­க­தாய் உள்­ளது.

தொற்­றின் தொடக்­கத்­தி­லேயே உட்­கொண்­டால் மாத்­திரை இன்­னும் சிறப்பாகச் செயல்­ப­டு­வ­தாக எம்எஸ்டி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

கடும் நோய் ஏற்­படக்கூடியவர் களில் பாதிப் பேர்க்கு நோயின் தீவி­ரத்தை அல்­லது மரண அபாயத்தை இது குறைப்பதாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யான இடைக்­கால பரி­சோ­தனை முடி­வு­கள் காட்­டு­கின்­றன.

எம்­எஸ்டி மருந்து நிறு­வ­னம் மருந்து பற்­றிய தர­வு­களை சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டைத்து அதன் அனு­ம­தி­யைப் பெற வேண்­டும். நிறு­வ­னம் தர­வு­களை ஒப்படைக்கும் தேதி­யைப் பொறுத்து அனு­மதி வழங்­கப்­படும் தேதி­யும் அமை­யும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.