மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிணைவோம்: அதிபர்

மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிணைவோம்: அதிபர்

2 mins read
c1f91729-c947-4942-8698-965861aec774
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மன­ந­லப் பிரச்­சி­னை­கள் ஒரு­வர் வாழ்­வில் பல வகைகளில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக் கூடி­யவை. ஆகை­யால், அப்பிரச்­சி­னை­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவ ஒரு தேச­மாக இணைந்து ஆத­ர­வ­ளிக்க வேண்­டும் என அதி­பர் ஹலிமா யாக்­கோப் கூறி­னார்.

அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து உதவி பெறு­வது ஒரு புறம் இருக்க, சமூ­க­மும் இதில் பெரிய பங்­காற்­ற­லாம் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

'சில்­வர் ரிப்­பன் சிங்­கப்­பூர்' ஏற்­பாட்­டில் நேற்று நிகழ்ந்த மன­நலப் பிரச்­சி­னை­கள் குறித்த ஆசிய பசி­பிக் மாநாடு, சந்­திப்பு 2021ல் கலந்­து­கொண்டு இக்­க­ருத்­து­களை அவர் தெரி­வித்­தார்.

மூன்­றாம் முறை­யாக நடை­பெறும் இந்­நி­கழ்ச்­சி­யில் பேசிய அதி­பர், தேவை­யான ஆத­ர­வோடு, சமூக சேவை நிறு­வ­னங்­கள், மன­நலப் பிரச்­சி­னை­கள் உள்­ளோ­ருக்­குச் சமூக அள­வில் பரா­ம­ரிப்பு வழங்­க­லாம் என்று கூறி­னார். மேலும், இந்­நி­று­வ­னங்­கள் கொண்ட நெருக்­க­மான தொடர்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி அர­சாங்க திட்­டங்­களைப் பெருக்க முன்­வ­ர­லாம் என்றும் அவர் கூறி­னார்.

மன­ந­லக் கழ­கத்­தில் மனச்­சோர்வு கார­ணத்­தால் சிகிச்சை பெரும் இளையர்களின் எண்­ணிக்கை 2015லிருந்து 2020 வரை 60% உயர்ந்­துள்­ள­தா­க­வும் இது கவலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­றும் அதி­பர் தெரி­வித்­தார்.

"இந்தச் சூழ­லைத் தடுத்து நிறுத்த சமூ­க­மாக நாம் ஏதா­வது செய்தே ஆக வேண்­டும்," என அதி­பர் கூறி­னார்.

'அதி­பர் சவால்' 2018ல் அதன் கவ­னத்தை மன­நலப் பிரச்­சி­னை­கள் மீது திருப்­பி­யுள்­ள­தா­க­வும் அவற்­றிற்கு ஆத­ர­வ­ளிக்­கும் பல திட்­டங்­க­ளுக்கு ஏறத்­தாழ $1.8 மில்­லி­யன் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­பர் தெரி­வித்­தார்.

அதி­பர் சவா­லு­டன் பங்­கா­ளி­யாக இணைந்து, மன­நலப் பிரச்­சி­னை­க­ளு­டைய இளை­யர்­க­ளைச் சமா­ளிக்க சமூக சேவை நிறு­வ­னங்­க­ளுக்­கான முன்­னோ­டிப் பாடத்­திட்­டம் ஒன்றை உரு­வாக்க, தாம் மன­நலக் கழ­கத்­துக்கு அண்­மை­யில் அழைப்பு விடுத்­துள்­ள­தாக அவர் குறிப்­பட்­டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சமூக சேவை நிற­வ­னம், 'கேம்­பஸ் பிஎஸ்­ஒய்'யின் நிறு­வ­ன­ரும் நிர்­வாக இயக்­கு­ந­ரு­மான திரு சோ மிங் சியு இத­னைச் சிறந்த திட்­டம் என்று பாராட்­டி­னார். மேலும் இது­போன்ற ஒரு பாடத்­திட்­டம் சமூக சேவை நிறு­வ­னங்­க­ளி­டையே சீரான தர­நி­லையை உறு­தி­ப்ப­டுத்­தும்.

சமூக சேவை நிறு­வ­னங்­கள் நிதி, ஆள் பற்­றாக்­குறை போன்ற பிரச்­சி­னை­க­ளைச் சந்­தித்து வரு­வ­தா­க­வும் அவற்­றைக் களைய மேலும் சில முயற்­சி­களை எடுக்­க­லாம் என்­றும் அவர் விளக்­கி­னார்.

மன­நலப் பிரச்­சி­னை­க­ளால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உதவ நாம் அவர்­க­ளுக்­குச் செவி­சாய்த்து அவர்­க­ளுக்கு உரிய மதிப்பு, மரி­யா­தை­யைக் கொடுக்­க­லாம் என நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேரா­சி­ரி­யர் ஃபாத்திமா கூறி­னார்.