பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே வழக்கமாக கொரோனா பரிசோதனையைச் செய்துகொள்ள மேலும் ஆதரவளிக்கும் வகையில், அக்டோபர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை ஏஆர்டி சுயபரிசோதனைக் கருவிகளை சுகாதார அமைச்சு விநியோகிக்கும்.
ஒவ்வொரு குடும்பமும் 10 கருவிகளுடன் கூடிய உறையைப் பெறும் என்று நடந்த கொவிட்-19 புதிய நடவடிக்கைகள் பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.

