தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டம் 11 நாடுகளுக்குச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்தின் பங்கு விலைகள் பெரிய அளவில் அதிகரித்தன.
பயணத் திட்டத்தை எந்த நாடுகளுக்குத் திறந்துவிடலாம் என்று பரிசீலிக்கப்பட்டபோதே நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டப்பட்டது. பயணத் திட்டம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டவுடன் அதன் பங்கு விலை கிட்டத்தட்ட ஒன்பது விழுக்காடு அதிகரித்தது.
'எஸ்ஐஏ இஞ்சினியரிங்' நிறுவனத்தின் பங்கு விலை பெரிய அளவில் 2.20 வெள்ளியைத் தொட்ட பிறகு சற்று குறைந்து 2.17 வெள்ளியாகப் பதிவானது. நற்செய்தியால் அதிகரித்த பங்கு விலைகள் தொடர்ந்து இவ்வாறே இருக்குமா என்பதைப் பார்க்கவேண்டும் என்று சில தரப்பினர் கூறுகின்றனர்.