பைனியரில் ஐந்து வாகனங்கள் விபத்து; நிலைகுலைந்த காரிலிருந்து ஆடவர் மீட்பு

பைனியர் வட்டாரத்தில் நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 11) பிற்பகல் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில், காரில் சிக்கிக்கொண்ட ஆடவர் ஒருவர் மீட்கப்பட்டார்.

ஜாலான் அகமது இப்ராகிம், பினாய் சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு கனரக வாகனம், ஒரு லாரி, மூன்று கார்கள் சிக்கிக்கொண்டன.

நண்பகல் 12.20 மணியளவில் இந்த விபத்து குறித்து தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், காரின் ஓட்டுநர் இருக்கையில் ஆடவர் ஒருவர் சிக்கிக்கொண்டதைக் கண்டறிந்தனர். போக்குவரத்து விளக்குக் கம்பத்தின்மீது அந்த கார் மோதியிருந்தது.

நிலைகுலைந்து காணப்பட்ட அந்த காரை நிலைப்படுத்திய பிறகே அந்த ஆடவரை அதிகாரிகள் மீட்டனர்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 54 வயது ஓட்டுநரும் 53 வயது ஆடவர், 48 வயது மாது ஆகிய இரு பயணிகளும் சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் கூறியது.

விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!