அழுத்தத்தை உணரும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள்

அழுத்தத்தை உணரும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள்

1 mins read
cb834056-f832-4c67-bc04-1757f1dae0e9
போதிய ஒய்வின்றி உழைக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்­தோர் எண்­ணிக்கை உயர்ந்து வரு­வ­தால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் வேலைப் பளு அதி­க­ரித்­துள்­ளது.

கூடு­தல் நோயா­ளி­க­ளுக்­குப் பணி­விடை செய்­வது, வேலை நேரத்­தை­விட கூடு­தல் நேரம் பணி­பு­ரி­வது, விடுப்பு நாட்­க­ளி­லும் வேலைக்­குத் திரும்­பும் நிலை ஏற்­ப­டு­வது ஆகி­ய­வற்றால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் அழுத்­தம் ஏற்­பட்­டுள்­ளது.

தமது மருத்­து­வ­ம­னைப் பிரி­வில் கண்­கா­ணிக்­கப்­படும் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை இரு­ம­டங்கு உயர்ந்­துள்­ள­தாக சிங்ஹெல்த் நிர்­வ­கிக்­கும் மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரி­யும் தாதி­யான ஏனி (உண்­மை­யான பெய­ரல்ல) தெரி­வித்­தார். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் ஒரே நேரத்­தில் ஆறு நோயா­ளி­களை அந்த 24 வயது தாதி­யும் அவ­ரு­டன் பணி­பு­ரி­யும் சக ஊழி­ய­ரும் பரா­ம­ரித்­த­னர்.

ஆனால் இப்­போது அந்த எண்­ணிக்கை 12ஆக அதி­க­ரித்­துள்­ளது.

"இடை­வே­ளைக்­குச் செல்­லக்­கூட எங்­க­ளுக்கு நேரம் கிடைப்­ப­தில்லை. சில சமயங்களில் கழிவறைக்குச் செல்லவும் மாட்டோம்," என்று ஏனி மனந்திறந்தார்.