உடற்குறை உள்ள 60 பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் வாழ்க்கைத்தொழில் திட்டங்கள் மூலம் வேலைத் திறன்
களைப் பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலைபெற 'த டேலண்ட் எக்ஸ்புளோரர்' என்னும் இத்திட்டம் கைகொடுக்கிறது.
செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 6 வரை செயல்பட்ட இத்திட்டம் உடற்குறையுள்ள மாணவர்கள் தொழில்துறை நிபுணர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. மேலும் சிங்கப்பூரில் தேவை அதிகமுள்ள துறைகளில் பணியாற்றுவதற்கு அவசியமான வேலைத் திறன்களின் அடிப்படை அம்சங்களைக் கற்றுக்கொள்ளவும் அவர் களுக்கு இத்திட்டம் உதவியது.
இவ்வாறு பலன் அடைந்தவர்களுள் ஒருவரான செங் இவ்-சுவென் (படம்) அரிதான ஒருவகைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். 17 வயதாகும் இவர் தற்போது தெமாசெக் பலதுறைத் தொழில்கல்லூரியின் சட்டம், நிர்வாகப் பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முதலாமாண்டு மாணவி.