பார்க்கரின் பெருமை கூறும் நூல்

பார்க்கரின் பெருமை கூறும் நூல்

2 mins read
486bdc68-34c2-41d3-86cf-d1dfffe3032e
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் (இடது) முன்னாள் அமைச்சர் இ.டபிள்யூ. பார்க்கரின் பேத்தி மேகன், மகள்கள் டெப்ரா, கார்லா ஆகியோருடன் உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முன்­னாள் அமைச்­சர் இ.டபிள்யூ. பார்க்­க­ரின் பெரு­மை­களை நினைவு­கூ­ரும் வகை­யில் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் தேசிய கல்­விக் கழ­கத்­தின் உடற்­ப­யிற்­சிக் கல்வி மற்­றும் விளை­யாட்டு அறி­வி­யல் ஏட்­டுக்­கல்வி குழு­வும் இணைந்து ஒரு சிறப்பு நூலை நேற்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வெளி­யிட்­டன.

திரு பார்க்­கர் சிங்­கப்­பூர் விளை­யாட்­டுத் துறைக்கு ஆற்­றிய பெரும் பங்­க­ளிப்பு, இ.டபிள்யூ. பார்க்­கர் பேரா­சி­ரி­யர் பதவி, உப­கா­ரச் சம்­ப­ளம் ஆகி­யவை பற்றி இந்­நூல் எடுத்­து­ரைக்­கும்.

முன்­னாள் இ.டபிள்யூ. பார்க்­கர் பேரா­சி­ரி­யர்­ பதவி, உப­கா­ரச் சம்­ப­ளம் ஆகியவற்றைப் பெற்­ற­வர் பத்துப் பேர் விளை­யாட்­டுத் துறையைப் பற்றி கூறும் அனு­ப­வங்­களும் இந்­நூ­லில் இடம்­பெற்­றுள்­ளன.

மறைந்த திரு பார்க்­கர் 1964ல் சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது சட்ட அமைச்­ச­ரா­னார். 1970 முதல் 1990 வரை 20 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் தேசிய ஒலிம்­பிக் மன்­றத்­தின் தலை வராக இருந்­தார்.

உள்­ளூர், வட்­டார, அனைத்­து­லக ரீதி­யில் விளை­யாட்­டுத் துறைக்கு ஆற்­றிய பங்­க­ளிப்­புக்கு அனைத்­து­லக ஒலிம்­பிக் குழு திரு பார்க்­க­ருக்கு ஒலிம்­பிக் ஆர்­டர் எனும் சிறப்புமிக்க நிர்­வா­க வெள்ளி பதக்­கம் அளித்து கௌர­வித்­தது.திரு பார்க்­கர், ஹாக்கி, கிரிக்­கெட், காற்­பந்து, ரக்பி, டென்­னிஸ், திடல்­த­டப் போட்­டி­கள் என பல்­வேறு விளை­யாட்­டு­களில் சிறந்து விளங்­கி­னார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இ.டபிள்யூ. பார்க்­கர் பேரா­சி­ரி­யர் பதவி மற்­றும் உப­கா­ரச் சம்­பள நிதித் திட்­டம் அவ­ர் மறைந்து ஓராண்­டுக்­குப் பிறகு 2002ல் தொடங்­கப்­பட்­டது.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன், "இந்த நூலை வெளி­யிட்ட தேசிய கல்­விக் கழ­கத்­துக்­கும் திரு பார்க்­க­ரின் குடும்­பத்­துக்­கும் நான் நன்றி கூறு­கி­றேன்.

"விளை­யாட்­டின் சக்தி நாட்­டின் ஒற்­று­மைக்­கும் எதிர்­கா­லத்­துக்­கும் முக்­கி­யம் என்­பதை வலி­யு­றுத்தி வந்த திரு பார்க்­கர், அதை மெய்ப்­பித்­தும் காட்­டி­னார். ஆரோக்­கி­ய­மான உடல், துடிப்­பான மன­நிலையை வளர்ப்­ப­தி­லும், சிறந்த குணம் ஆகி­ய­வற்­றுக்கு கட்­டொ­ழுங்கு இன்­றி­ய­மை­யா­தது என்­றும் தெரி­வித்­தார்.

"திரு பார்க்­க­ரின் பெரு­மை­களை நினை­வு­கூ­ரும் இந்­நா­ளில், அவ­ரது பல பங்­க­ளிப்­பு­கள் நமது தேசத்­தின் ஒற்­று­மை­யைக் கட்­டிக்­காத்து, நமது விளை­யாட்­டின் தரத்தை இன்­னும் உய­ர­மான இடத்­துக்­குக் கொண்டு செல்­லும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் திரு டியோ.

"திரு பார்க்கரைப் பற்றி நினைவுபடுத்தும் இ.டபிள்யூ. பார்க்­கர் பேரா­சி­ரி­யர் பதவி மற்­றும் உப­கா­ரச் சம்­பள நிதித் திட்­டம் நமது திறன்களையும் ஆற்றல்களையும் சிறந்த முறையில் வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து சிங்கப்பூருக்கும் சிறந்து பங்களிக்க ஊக்கமளிக்கும்," என்று திரு டியோ தெரிவித்தார்.

திரு பார்க்கரின் புதல்விகளான டெப்ரா, கார்லா உட்பட அவரது குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.