என்யுஎஸ் பேராசிரியருக்கு புவியியல் 'நோபெல் பரிசு'

என்யுஎஸ் பேராசிரியருக்கு புவியியல் 'நோபெல் பரிசு'

1 mins read
8eba46fc-eb01-43a9-8587-5a0d85a91066
-

புவி­யியல் துறைக்­கான நோபெல் பரிசு என்று கரு­தப்­படும் அனைத்­து­லக வாவ்ட்­ரின் லுட் பரிசு, என்யுஎஸ் பேரா­சி­ரி­யர் பிரண்டா இயோ­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விரு­தைப் பெற்ற முதல் சிங்­கப்­பூரர் எனும் பெருமை

இவ­ரைச் சேரும்.

புவி­யி­யல் துறை­யில் சிறந்து விளங்கி, சாதனை படைக்­கும் நிபு­ணர்­க­ளுக்கு இந்த விருது வழங்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் வெளி­நாட்டு ஊழி­யர்­

க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பிரச்­

சி­னை­க­ளைச் சுட்டி, சிங்­கப்­பூர் போன்ற நாடு­க­ளுக்­குத் தற்­காலிகக் குடி­யேற்­றம் நிரந்­தரத் தீர்­வைத் தராது என்ற கருத்தை முன்­வைத்­தார். வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளை­யும் தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் திட்­டத்­து­டன் இணைத்து அவர்­க­ளுக்­கும் பாது­காப்பு வழங்கவேண்­டும் என்­றார் அவர். இந்த மாற்­றம் தேவை என்­பதை உல­கத்தை உலுக்கி வரும் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை உணர வைத்­துள்­ள­தாக பேரா­சி­ரி­யர் இயோ கூறி­னார்.

தமது பணி அங்கீகரிக்கப்பட்டு தாம் கௌரவிக்கப்பட்டது குறித்து பேராசிரியர் இயோ மகிழ்ச்சி தெரி­வித்­தார்.