ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள என்டியுசி ஹெல்த் தாதிமை இல்லத்தில் தங்கிய இருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து, அதன் நிர்வாகம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது.
கொவிட்-19 குழுமம் உருவா
வதைத் தடுக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அது நடைமுறைப்படுத்தியது.
"இல்லவாசிகள் இருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்ட செய்தி வெளிவந்ததும் அனைவரும்
கவலையில் ஆழ்ந்தோம். எங்கள் தாதிமை இல்லத்தில் தங்குபவர்கள் அனைவரும் முதியவர்கள். கொவிட்-19 கிருமித்தொற்றால் அவர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
"அதுமட்டுமல்லாது, கொவிட்-19 கிருமித்தொற்றைத் தவிர்க்க நாங்கள் கடுமையாகப் பாடுபட்டோம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்
படுத்தியும் பாதிப்பு ஏற்பட்டதை எண்ணி ஏமாற்றமடைந்தோம்," என்று ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள என்டியுசி ஹெல்த் தாதிமை இல்லத்தில் தாதிமை நிர்வாகியாகப் பணிபுரியும் டியோ ஐ லியான் தெரிவித்தார்.
தங்கள் தாதிமை இல்லம் இன்னொரு கொவிட்-19 குழுமமாக மாறிவிடக்கூடாது என்பதில் 39 வயது திருவாட்டி டியோவும்
அவரது குழுனிவரும் முனைப்
புடன் இருந்தனர்.
இல்லவாசிகள் அனைவரைக்கும் அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்தனர். தாதிமை இல்லத்தில் வெவ்வேறு பிரிவுகள் அமைத்து அதில் இல்லவாசி
களைத் தங்கவைத்தனர்.
பதற்றத்துடன் இருந்த மூத்தோருக்கு திருவாட்டி டியோவின் குழுவினர் ஆறுதல் கூறினர்.
இல்லவாசிகளை அவர்களது குடும்பத்தினர் நேரில் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தாதிமை இல்லத்தில் தங்கும் மூத்தோரின் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு அவர்களது உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள என்டியுசி ஹெல்த் தாதிமை இல்லத்தில் 180 ஊழியர்களும் 250 இல்லவாசிகளும் இருக்கின்றனர்.
"ஊழியர்களில் பெரும்பாலானோர் கூடுதல் நேரம் பணி
புரிந்தனர். சிலர் நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்தனர். சமூக இடைவெளி விதிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இல்லவாசிகளைப் பார்த்துக்கொள்ளும் அதே வேளையில் எங்கள் உடல்நலத்தையும்
நாங்கள் கண்காணித்தோம்.
"இல்லவாசி இருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து, மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. தாதிமை இல்லத்தில் உள்ள தாதியருக்கு இது சவால்மிக்க சூழ்நிலையாக அமைந்தது.
"குறிப்பாக, நீண்டநாட்களாகத் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்காமல் இருந்த வெளிநாட்டுத் தாதியர் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்," என்று திருவாட்டி டியோ கூறினார்.