கொவிட்-19 காரணமாக மேலும் 11 முதியவர்கள் மரணமடைந்துவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. மாண்டவர்கள் 66 வயதுக்கும் 98 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் ஐவர் ஆடவர்கள், ஆறு பேர் பெண்கள். மூன்று பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். ஆறு பேர் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்கள். இரண்டு பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் ஏற்
கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த நோய்கள் குறித்து சுகாதார அமைச்சு தகவல் வெளியிடவில்லை.
இந்த 11 பேரையும் சேர்த்து கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் இதுவரை 183 பேர் மாண்டு விட்டனர்.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மேலும் 2,976 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 2,721 பேருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில் 251 பேர் பாதிக்கப்பட்டனர். வெளிநாடு
களிலிருந்து வந்த நால்வருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் 519 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். நேற்று முன்
தினம் பதிவான எண்ணிக்கையுடன் சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132,205ஆக அதி
கரித்தது.