பிரதமர் லீ: பாதுகாப்பு அம்சங்களை மறக்கக்கூடாது

1 mins read
64c980c1-47e0-48e0-9d64-91dc3708ce74
-

ஆப்­கா­னிஸ்­தா­னில் எழுந்­துள்ள மனி­தா­பி­மான பிரச்­சி­னை­யைக் கையா­ளும் அதேவேளை­யில் பாது­காப்பு விவ­கா­ரங்­களை உல­கம் மறந்­து­வி­டக்­கூ­டாது எனப் பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யுள்­ளார். பாது­காப்புப் பிரச்­சி­னை­யால்­தான் ஆப்­கா­னிஸ்­தான் விவ­கா­ரத்­தில் உல­கம் தலை­யி­ட­வேண்­டி­யி­ருந்­த­தை திரு லீ சுட்­டி­னார்.

ஆப்­கா­னிஸ்­தா­னின் தற்­போதைய நிலை, இந்த வட்­டா­ரம் உள்­ளிட்ட பகு­தி­களில் பயங்­க­ர­வாத அமைப்­பு­கள் தங்­களை வளர்த்­துக்­கொள்ள வகை­செய்­யா­மல் இருக்­க­வேண்­டும் எனப் பிர­த­மர் வருத்­தம் தெரி­வித்­தார்.

ஆப்­கா­னிஸ்­தானை மறு­நிர்மாணம் செய்ய அனைத்­து­ல­க சமூ­கத்­து­டன் இணைந்து செயல்­படும் அர­சாங்­கம் அந்­நாட்­டிற்கு அமை­யவேண்டும் என்ற நம்பிக்கை கொண்­டுள்­ள­தாக அவர் சொன்­னார்.