சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ380 ரக விமானங்கள் 18 மாதங்களுக்கும் அதிக காலம் தரையிறக்கப்பட்டிருந்தன. இவ்விமானங்கள் நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து மீண்டும் சேவையைத் தொடங்கும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
இந்த ஜம்போ வகை விமானம் எஸ்கியூ 322 என சிங்கப்பூரி லிருந்து லண்டனுக்கும் எஸ்கியூ 317 என லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கும் வழிநில்லா சேவைகளை வழங்கும்.
எஸ்கியூ 317 சேவை, தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான பயண ஏற்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளைச் சுமந்து வரும். பிரிட்டனில் இருந்து வரு வோர் அக்டோபர் 19 முதல் தனிமை யில் இருக்க வேண்டிய தேவை யில்லா பயண வசதியைப் பெறுவர்.
ஏ380 விமானத்தை லண்டன் சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்னதாக அதை குறுந்தொலைவு சேவைகளில் எஸ்ஐஏ ஈடுபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.