உள்ளூர் தொலைத்தொடர்பு நிறு வனங்கள் அல்லது அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த தொழில்நுட்ப உதவியாளர்கள் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்கள் தேடப்பட்டு வருவதாக போலிசார் தெரிவித்ததுள்ளனர்.
கடந்த மாதம் இந்த மோசடிக்காரர்களிடம் இரண்டு பேர் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழக்கும் ஆபத்தில் இருந்தனர்.
அந்த இருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 300,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை மாற்ற அந்த மோசடிக்காரர்கள் முயன்றனர்.
நல்ல வேளையாக ஓசிபிசி வாங்கியைச் சேர்ந்த அதிகாரிகளும் அந்த வங்கியின் மோசடி கண் காணிப்புக் கட்டமைப்பும் இந்த சந்தேகத்திற்குரிய பணமாற்ற வேண்டுகோள்களைக் கண்டுபிடித்தனர். ஏமாற்ற முயன்ற அந்த இருவரை உடனே தொடர்புகொண்ட வங்கி அதிகாரிகள் உண்மையை அறிந்து கொண்டனர்.
மோசடிக்காரர்கள், தங்களை அரசாங்க அமைப்புகள் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக அறிமுகப்படுத்திக்கொண்டு ஏமாற்ற முயற்சி செய்வார்கள்.
தங்களிடம் பேசுவோரின் கம்பியில்லா இணையச் சேவை சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாகக் கூறுவர் அல்லது இவர்களது கணினி அல்லது திறன்பேசிகள் இணையக் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்வர்.
டீம்வியுவர், எனிடெஸ்க் போன்ற மென்பொருட்களின் வழியாக ஏமாற்றுக்காரர்கள், தொலைவிலிருந்து பாதிக்கப்பட்டோரின் கணினிகளைப் பயன்படுத்தி இணைய வங்கி விவரங்களைப் பெற்றுக்கொள்வர்.
நேர்மையான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இப்படி தொலைபேசியின் மூலமாக வங்கி விவரங்களைப் பெறமாட்டார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்பு வதாக போலிசார் கூறினர்.