ஐந்து நாடுகளை உள்ளடக்கிய எஃப்டிஏ தற்காப்பு உடன்பாட்டின் பொன்விழா ஆண்டையொட்டி மரினா சவுத் கடற்பகுதியில் விமான, கப்பல் அணிவகுப்புக் காட்சி நடைபெற உள்ளது.
நாளை மறுதினம் திங்கட்
கிழமை நடைபெற உள்ள இந்நிகழ்வு தற்காப்பு அமைச்சின் சமூக ஊடகத் தளங்களில் அன்று நண்பகலில் நேரலையாக இடம்பெறும்.
எஃப்டிஏ என்பது ஐந்து ஆற்றல் தற்காப்பு என்னும் உடன்பாடு. சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து 1971ஆம் ஆண்டு இந்த தற்காப்பு உடன்பாட்டை ஏற்படுத்தின.
இந்த ஐந்து நாடுகளில் ஏதாவது ஒன்றில் ஆயுதத் தாக்குதல் அல்லது அதற்கான மிரட்டல் இடம்பெற்றால் அதனைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்த ஐந்து நாடுகளும் உடடினயாக ஒன்றுசேர்ந்து ஆலோசிக்கும்.
எஃப்டிஏ ஐம்பதாவது ஆண்டின் விமான, கடற்படைக் கப்பல் காட்சி 'பெர்சாமா கோல்ட் 2021' பயிற்சியின் முடிவில் இடம்பெற உள்ளது.
இந்த இருவார தளப் பயிற்சியில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,600 படைவீரர்கள் இடம்பெற்றதாக தற்காப்பு அமைச்சு நேற்று முன்தினம் கூறியது.
தென் சீனக் கடலின் அனைத்துலக நீர்ப்பரப்பின் தென் பகுதியில் நேரடித் தொடர்பற்ற முறையில் கடல்துறைப் பயிற்சி இடம்பெற்றது இரு வாரப் பயிற்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது.
விமான எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, துப்பாக்கி எதிர்த் தாக்குதல் போன்றவை பயிற்சியின்போது செய்து பார்க்கப்பட்டன.
விமான அணிவகுப்புக் காட்சி யின் தொடக்கத்தில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை விமானங்கள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.