சிங்கப்பூரில் மாற்றியமைக்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான கரிம வரி விகிதம் குறித்து அடுத்த
ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது அறிவிக்கப்படும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டு வரை நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை மாற்றியமைக்கப்படும் விகிதத்தைக் கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் கரிம விலை மிகவும் குறைவாக இருப்பதாக 35வது சிங்கப்பூர் பொருளியல் கலந்துரையாடலில் அமைச்சர் வோங் நேற்று கூறினார்.
இதன் காரணமாகவே கரிம வரி விகிதத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்வதாக அவர் தெரிவித்தார்.
கரிம விலையைப் பிரதிபலிக்க அதன் வரி விகிதம் மாற்றியமைக்கப்படுவதாகவும் முதலீடு செய்வது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை அது மாற்றும் என்றும் அமைச்சர் கூறினார்.
கரிம வரி விகிதம் அதிகரிக்கப்படும் அதே வேளையில், குறைந்த வருமான குடும்பங்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவி செய்யும் வகையில் யு-சேவ்
தள்ளுபடி வழங்கப்படும் என்றார் திரு வோங்.
கரிம வரியை 2019ஆம்
ஆண்டில் சிங்கப்பூர் அறிமுகப்
படுத்தியது.
இந்த வரியை அறிமுகப்படுத்திய முதல் தென்கிழக்காசிய நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. ஆனால் ஒரு டன்னுக்கு $5 வரி விகிதம் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் பொருளியல்
பசுமைத் திட்டத்துக்கு மாறும் வேளையில், கரிம விலை முக்கிய இடம்பெறுவதாக திரு வோங் கூறினார். மாற்றத்துடன் பழகிக்கொள்ள வர்த்தகங்களுக்குப் போதிய நேரம் அவசியம் என்பது தமக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.
சுத்தமான ஹைட்ரோஜன், கரிமம் ஆகியவை தற்போதைய ஆகச் சிறந்த தெரிவுகளாக இருக்கின்றன. இருப்பினும், உடனடி நடை
முறைக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் தயாராக இல்லை. எனவே, ஆய்வு, மேம்பாடு ஆகியவற்றில் சிங்கப்பூர் அதிக அளவு முதலீடு செய்வதாக அமைச்சர் வோங் கூறினார்.
"மின்சாரத்தை இறக்குமதி செய்வது உதவக்கூடும். ஆனால் சிங்கப்பூருக்குத் தேவையான ஒட்டுமொத்த அளவிலான மின்சாரத்தையும் இறக்குமதி செய்ய நாங்கள் விரும்பவில்லை.
"மின்சார இறக்குமதிக்கு வரம்பு கள் உள்ளன. அதில் தொழில்நுட்ப விவகாரங்களுடன் எரிசக்திப் பாதுகாப்புப் பிரச்சினைகளும் உள்ளன," என்று திரு வோங் தெரிவித்தார்.
வரித் தொகையை அதிகரிப்
பதன் மூலம் தொடர் செலவு
களுக்கு நீடித்த நிலைத்தன்மையுடனும் பொறுப்புடனும் நிதி திரட்ட முடியும் என்றார் அவர்.

