அடுத்த மாதத்துக்கும் ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வழங்கப்பட இருக்கும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
நிலப் பற்றாக்குறை காரணமாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. தற்போது சிங்கப்பூரில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்குவதாக ஆணையம் கூறியது. சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2025ஆம் ஆண்டு இறுதி வரை ஆண்டுக்கு 0.25% வரை அதிகரிக்கலாம்.

