தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யிப் பின் சியுவிற்கு 800,000 வெள்ளிப் பரிசு

1 mins read
142dff34-3a48-495b-9598-a72e095a09f6
காசோலை பெறும் சிறப்புத் தேவையுடைய சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்வாண்டு நடைபெற்ற சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்­கான ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூ­ருக்கு இரண்டு தங்­கப் பதக்­கங்­களை வென்று தந்த யிப் பின் சியு­விற்கு வெகு­மா­ன­மாக 800,000 வெள்ளி பரிசுத் தொகை­ வழங்­கப்­பட்டுள்ளது. 'ஏஏஏ' எனப்­படும் விளை­யாட்­டா­ளர் சாதனை விருது­க­ளுக்கு 'டிபி­எஸ்' வங்கி ஆத­ர­வா­ளர் அமைப்­பாக உரு­வெடுத்­தி­ருப்­ப­தால் இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

தனது ஒவ்வொரு தங்கப் பதக்கத்திற்கும் 200,000 வெள்ளித் தொகையைப் பெறவிருந்திருந்தார் யிப். இப்போது அந்தத் தொகை இரு மடங்காகியுள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்குத் தங்கம் வென்று தந்த ஜோசஃப் ஸ்கூலிங் பெற்ற பரிசுத் தொகை ஒரு மில்லியன் வெள்ளி.விளை­யாட்­டா­ளர் சாதனை விரு­து­க­ளின் முக்­கிய ஆத­ரவு அமைப்­பாக சிங்­கப்­பூர் பந்­த­யப்­பி­டிப்பு வாரி­யம். அதற்கு ஈடு­கொ­டுத்து 'டிபி­எஸ்' வங்­கி­யும் இணைந்து ஆத­ர­வ­ளிக்­கிறது. 2024ஆம் ஆண்டு சிறப்­புத் தேவை­யு­டை­யோர் ஒலிம்­பிக் விளை­யாட்­டு­கள் வரை இந்த ஏற்­பாடு நீடிக்­கும்.