பொங்கோல் இலகு ரயில் பாதையில் (எல்ஆர்டி) சமிக்ஞை கோளாறுகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 17) ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சேவைத்தடையை எஸ்பிஎஸ் டிரான்சி நிறுவனம் பிற்பகல் 12.02 மணிக்கு முதலில் அறிவித்தது. சேவைத்தடைக்காக பயணிகளிடம் எஸ்பிஎஸ் மன்னிப்பு கேட்டது. பிற்பகல் 12.14 மணிக்கு சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.