மனநலம் பற்றிய செறிவான கலந்துரையாடல்கள்: 'மெண்டல் ஆக்ட்' மாநாடு 2021

மனநலம் பற்றிய செறிவான கலந்துரையாடல்கள்: 'மெண்டல் ஆக்ட்' மாநாடு 2021

3 mins read
1e29c548-ac9a-4175-81f8-56ac4e9757a5
'மெண்­டல் ஆக்ட்' அமைப்பு நடத்திய மாநாடு அமர்வுகளில் ஒன்றில் பேச்சாளர்கள் கலந்துரையாடினர். மாநா­ட்டில் கலந்துகொள்ள 200க்கும் அதி­க­மா­னோர் விண்­ணப்­பித்­த­னர். படம்: மெண்­டல் ஆக்ட்' -

இந்­திய சமூ­கத்­தி­ன­ருக்கு மன­ந­லத் திட்­டங்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் வழங்­கும் 'மெண்­டல் ஆக்ட்' மன நல விழிப்­பு­ணர்வு அமைப்பு நடத்­தும் இரண்டாம் மாநாடு, மெய்­நி­கர் வடி­வில் இடம்­பெற்று வரு­கிறது.

'இழுக்கை நீக்­கு­தல், சம­நிலை காணுதல்' என்ற கருப்­பொ­ரு­ளு­டன் இம்­மா­நாடு நான்கு சனிக்­கி­ழ­மை­களாக நடை­பெற்று வரு­கிறது. இந்த ­மா­தம் 2ம் தேதி தொடங்­கிய மாநாடு 23ம் தேதி நிறை­வ­டை­யும்.

'இழுக்கை நீக்­கு­தல், சம­நிலை காணு­தல்' எனும் கருப்­பொ­ரு­ளைப் பற்றி விளக்­கிய நிகழ்ச்­சி­யின் செயலாக்கத் தலை­வர் பிரியா ரவி, 24, மன­நல உதவி நாடு­வதை சமூ­கத்­தில் சிலர் இழி­வா­கக் கருது வதால் பலர் உதவி பெறு­வ­தைத் தவிர்ப்­ப­தா­கக் கூறி­னார்.

"மாநாட்­டின் வழி­யாக விழிப்­பு­ணர்வை அதி­க­ரித்து பங்­கேற்­பா­ளர்களின் ­திறன்­களை வளர்ப்­பது எங்­கள் நோக்­க­மா­கும். மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட அன்­புக்­கு­ரி­யோருக்கு எவ்வாறு உதவுவது, நினைத்­த­தைச் சொல்வதற்­கான பாது­காப்­பான, சுமு­க­மா­னச் சூழலை எப்­படி உரு­வாக்­கு­வது போன்­ற­வற்றை பங்­கேற்­பா­ளர்­கள் தெரிந்து­கொள்­வர்," என்றார் பிரியா.

கடந்த 2ஆம் தேதி தொடங்­கிய மாநாட்­டில், சிறு­பான்­மை­யின­ரின் அனு­ப­வம்', 'பழக்­கங்­க­ளுக்கு அடி­மை­யா­கு­தல்' எனும் தலைப்­பு­களில் கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெற்­றன.

சிறு­பான்­மை­யி­ன­ரின் அனு­ப­வம் எனும் அமர்­வில் பாகு­பா­டு­க­ளுக்கு எதி­ரான கொள்­கை­களையும் கல்வி, பயிற்சி போன்ற துறை­களில் சில சீர்­தி­ருத்­தங்­களையும் பேச்­சா­ளர்­கள் பரிந்­து­ரைத்­த­னர்.

மாற்­றுக் கருத்­து­க­ளைக் கேட்­ட­றி­யும் திறன் வலுப்படுத்­தப்­ப­ட­வேண்­டும் என்­றும் அது பல்­வேறு பிரச்­சி­னை­களை வெளிப்­ப­டுத்தி, தீர்­வு­காண வழி­காட்­டும் என்றும் பேச்­சா­ளர் நஸ்­ரத் ஃபாஹிமா தெரி­வித்­தார்.

மது அருந்­து­தல், போதைப் புழக்­கம் போன்ற பல­ரும் அறிந்த பிரச்­சி­னை­களைத் தாண்டி, மிகையான காதல் உணர்வு, மிகையான பாலி யல் உறவு போன்ற ஒரு­வரை அடி­மை­யாக்­கும் மாறு­பட்ட பழக்­கங்­கள் பற்­றி­யும் மாநாட்­டில் பேசப்­பட்­டது.

சில நேரங்­களில் இணை­யத்­தில் காணப்­படும் தவ­றான அறி­வுரை களால் இளை­யர்­கள் தவ­றான முடி­வு­களை எடுப்­ப­தா­கக் கூறி­னார் ஓர் அமர்­வில் பேசிய சமூ­கச் சேவை­ஊழி­யர் கீஷன் மேனன்.

வெளிப்­ப­டை­யான உரை­யா­ட­லின்­மூ­லம் அவர்­கள் சரி­யான தீர்வு ­களை நாட முடி­யும் என்று இவர் குறிப்­பிட்­டார்.

பல­வும் மேலோட்­ட­மாகி விட்ட இன்­றை­ய சூழ­லில், உணர்வுகளை மேம்­பட்ட விழிப்­பு­நி­லை­யு­டன் புரிந்து­ கொண்டு மற்­ற­வர்­க­ளு­டன் தொடர்பு ­கொள்­வது முக்­கிய திறன் ஆகி­விட்­டது.

நாம் நினைப்­ப­தை­யும் உணர் வதை­யும் தெளி­வாக, துல்­லி­ய­மாக வெளிப்­ப­டுத்­து­வதே மேம்­பட்ட விழிப்­பு­நி­லை­யு­டன் தொடர்­பு­கொள்­வது என்று மாநாட்­டில் பகி­ரப்­பட்­டது. மனதை அமை­திப்­ப­டுத்­து­தல், முன்­னோக்­கிச் சிந்­தித்­தல், கார­ணத்­தைத் தெளி­வு­ப­டுத்திப் பேசு­தல் போன்­றவை நல்ல திறன்­கள் என்­றும் கூறப்­பட்­டது.

வரும் சனிக்­கி­ழமை 23ம் தேதி­யன்று மாநாட்­டின் ஒரு பகு­தி­யாக மனித நூல­கம்' எனும் மாநாட்­டின் மற்றோர் அங்­கம் நடை­பெ­றும்.

'பைபோ­லார்', 'ஓசிடி' 'ஸ்கிட்­ஸோ­ஃபி­ரே­னியா' போன்ற மன நலப் பிரச்­சி­னை­கள், பிற­ரைப் பரா­ம­ரிப்­ப­வர்­கள் எதிர்­நோக்­கும் மன உளைச்­சல் போன்ற அனு­ப­வங்­களை விவ­ரிக்­கும் 11 நூல்­கள் அறி­மு­கம் செய்­யப்­படும்.

"மாநாட்டுக்கு விண்­ணப்­பித்த 200 பேரில் குறைந்­தது 75% பேர் சிங்­கப்­பூர் இந்­தி­யர்­கள். பெரும்­பா­லா­னோர் 25 வய­துக்­கும் 45 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். மூத்­தோர் பல­ரும் முன்­வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது," என்று நிகழ்ச்­சியை வழி நடத்­தும் குமாரி பிரி­ய­நிஷா, 29 தெரிவித்தார்.

மாநாட்டை இணை­யத்­தில் நடத்­து­வது பங்­கேற்­பா­ளர்­கள் பல­ருக்கு வச­தி­யாய் உள்­ளது என்­றார் அவர்.

"நேர­டி­யாக நடத்­தப்­படும் மா நாடு­களில் கலந்­து­கொள்ள வெட்­கப்­படும் சிலர், பெய­ரை­யும் முகத்­தை­யும் மறைத்து இந்த மாநாட்­டில் கலந்­து­கொள்­ளும் வாய்ப்­பைப் பெற்­றுள்­ள­னர். இதுவே உதவி நாடு­ வ­தற்­குப் பல­ருக்கு ஊக்­க­த்தைத் தந்­துள்­ளது," என்­றார் பிரி­ய­நிஷா.

செய்தி: கி.ஜனார்த்­த­னன்