'நீச்சல் குளத்தில் சிறுமி மூழ்கி மாண்டது துரதிர்ஷ்ட சம்பவம்'

1 mins read
89947387-7e26-4def-ad44-c5f1b91ecebf
-

நீச்­சல் குளத்­தில் 5 வயது சிறுமி மூழ்கி மாண்­டதை சோக­மான, துர­திர்ஷ்ட சம்­ப­வம் என மரண விசா­ரணை அதி­காரி கமலா பொன்­னம்­ப­லம் தீர்ப்­ப­ளித்­துள்­ளார்.

ஔரே­லியா லியூ ஜியா­பா­வின் மர­ணம் சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தல்ல என்று அவர் கூறி­னார்.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 8ஆம் தேதி மாலை 6 மணி அள­வில் ஃபேரர் சாலை அரு­கில் உள்ள தங்­க­ளது தி அசானா கொண்­டோ­மி­னி­யத்­தின் நீச்­சல் குளத்­துக்கு 1.06 மீட்­டர் உய­ர­முள்ள ஔரே­லி­யா­வும் அவ­ரது தாயா­ரான திரு­வாட்டி லூ யிங்­கும் சென்­ற­னர்.

1.2 மீட்­டர் ஆழம் கொண்ட பெரி­ய­வர்­க­ளுக்­கான நீச்­சல் குளம் அங்கு இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

0.8 மீட்­டர் ஆழம் கொண்ட ஜக்­கூ­சி­யில் ஔரே­லியா விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­தார்.

6.10 மணி அள­வில் திரு­வாட்டி லூ கழி­வ­றைக்­குச் செல்ல வீடு திரும்­பி­னார். 6.31 மணி அள­வில் திரு­வாட்டி திரும்­பி­ய­போது பெரி­ய­வர்­க­ளுக்­கான நீச்­சல் குளத்­தின் அடி­யில் ஔரே­லியா இருந்­த­தைக் கண்­டு­பி­டித்­தார்.

மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட ஔரே­லி­யா­வுக்கு மூளைச் சாவு ஏற்­பட்­டு­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 11ஆம் தேதி­யன்று அவ­ருக்­குப் பொருத்­தப்­பட்­டி­ருந்த செயற்கை சுவா­சக் கருவி அகற்­றப்­பட்­டது.