பணிப்பெண்ணைச் சீரழிக்க முயன்ற 68 வயது ஆடவருக்கு 12 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பணிப்பெண்ணைத் தாக்கிய அந்த ஆடவருக்கு ஆண்மைக் குறைபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆடவரின் குடும்பத்துக்காகப் பணிபுரிய அப்பணிப்பெண் தொடங்கி ஒரு மாதத்துக்குள் அவரைப் பாலியல் ரீதியாகத் தாக்க அவர் முயன்றார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
2019ஆம் ஆண்டில் அந்தக் குற்றம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு 25 வயது.
குற்றம் புரிந்த ஆடவருக்கு 50 வயதுக்கும் மேலாகிவிட்டதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இன்னொரு பணிப்பெண்ணின் உதவியை பாதிக்கப்பட்ட பெண் நாடினார். பணிப்பெண்களுக்கான மையத்துக்கான தொடர்பு எண் அவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் புகார் செய்ய அப்பெண் தயங்கினார்.
ஆனால் அவர் மீண்டும் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதை அடுத்து, அவர் உதவி நாடினார். அந்த ஆடவரைப் போலிசார் கைது செய்தனர்.

