கொவிட்-19 சமூக சிகிச்சை வளாகங்களில் தோள்கொடுக்கும் ஆயுதப்படை பணியாளர்கள்

2 mins read
00aae42a-e959-4cc5-b8c2-b01b9ce4e7c4
-

கொவிட்-19 சமூக சிகிச்சை வளாகங்­களில் உதவி புரி­வ­தற்­காக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் (எஸ்­ஏ­எஃப்) அதன் 70 பணி­யா­ளர்­களை அனுப்­பும் என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் தெரி­வித்­தார்.

மருத்­துவ, தாதிமை, நிர்­வா­கப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த இந்த 70 பேரும், கொவிட்-19க்கு எதி­ராக சிங்­கப்­பூர் தொடுத்­துள்ள போரில் இது­வ­ரை­யி­லான ராணு­வத்­தின் பங்கை ஒரு படி மேலே உயர்த்­து­வர் என்று கூறப்­ப­டு­கிறது.

"இது தேசிய அள­வி­லான ஒரு முயற்சி. இதற்­காக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் அதன் பங்கை ஆற்­றும்," என்று பதி­வில் திரு இங் குறிப்­பிட்­டி­ருந்­தார். வரும் மாதங்­களில் உட்­லண்ட்ஸ் ஹெல்த் மற்­றும் டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யு­டன் எஸ்­ஏ­எஃப் இணைந்து செயல்­படும் என்­றார் அவர். எஸ்­ஏ­எஃப் பணி­யா­ளர்­கள் உத­விக்­க­ரம் நீட்­டும் அவ்­விரு கொவிட்-19 சிகிச்சை வளா­கங்­கள் யாவை என்று அமைச்­சர் குறிப்­பி­ட­வில்லை.

மருத்­து­வப் பரா­ம­ரிப்பு தேவைப்­படாத நிலை­யில் உள்ள கொவிட்-19 நோயா­ளி­களை அந்த இரு வளாகங்­களும் அனு­ம­திப்­ப­தால் மருத்­து­வ­மனை­கள் மீதுள்ள அழுத்­தம் குறை­யும் என்­றார். கடந்த பல வாரங்­களாக கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை கட்­டுக்­க­டங்கா­மல் அதி­க­ரிப்­ப­தால் மருத்­து­வ­மனை ஊழி­யர்­க­ளுக்­குத் தாளா அழுத்­தம் ஏற்­பட்டு வரு­கிறது.

கொவிட்-19 நோயா­ளி­கள் தங்கு­வ­தற்­கா­கப் புதி­தாக ஏற்­ப­டுத்­தித் தரப்­பட்­டவை, இந்த சமூக சிகிச்சை வளா­கங்­கள். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட மூத்­தோர், நல­மாக இருந்­தும் வேறு மருத்­து­வப் பிரச்­சி­னை­க­ளைக் கொண்­டி­ருந்­தால் அவர்­க­ளுக்­கும் இந்த வளா­கங்­கள் ஏற்­பு­டை­ய­தாக இருக்­கும். இது­போன்ற முதல் வளா­கம் கடந்த மாதம் தெம்­ப­னிஸ் வட்­டா­ரத்­தில் அமைக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து, மேலும் நான்கு வளா­கங்­கள் அமைக்­கப்­பட்­டு­விட்­டன.

இந்த வளா­கங்­கள், கிட்­டத்­தட்ட 1,200 படுக்­கை­க­ளைக் கொண்­டுள்­ளன. இம்மாத இறு­திக்­குள் இந்த எண்­ணிக்கை 3,700ஐத் தொடும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

வீடு தேடிச் செல்­லும் நட­மா­டும் தடுப்­பூ­சித் திட்­டம், வீட்­டில் இருந்­த­வாறு குண­ம­டை­யும் திட்­டம் போன்ற மற்ற கொவிட்-19 திட்­டங்­க­ளுக்­கும் எஸ்­ஏ­எஃப் பங்­காற்றி வரு­கிறது.

"சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், நம் நாய­கர்­கள். ஆனால், அதி­க­ரித்­து­வ­ரும் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளால் அவர்­க­ளின் மன­ந­ல­னும் உடல்­ந­ல­னும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இப்­போது அவர்­க­ளுக்கு நமது ஆத­ர­வும் உத­வி­யும் தேவைப்­ப­டு­கிறது," என்­றார் டாக்­டர் இங்.