கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை மேலும் அதிகமான புற்றுநோயாளிகள் நாடுவதாக சிங்கப்பூர் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் (என்சிசிஎஸ்) தெரிவித்துள்ளது.
நிலையத்தின் கீழ் ஏறத்தாழ 8,500 புற்றுநோயாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் 68 விழுக்காட்டினர், முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோர் 8 விழுக்காட்டினர் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் 24 விழுக்காட்டினர் என்று கூறப்பட்டது.
கொவிட்-19 தொற்றால் உடல் உறுப்பு செயலிழத்தல், 'நிமோனியா', உயிரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தைத் தடுப்பூசி குறைக்கும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறுவோர், முடிந்தவரை விரைந்து தங்களது தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறு என்சிஎஸ்எஸ் மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
புற்றுநோயாளிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் எழக்கூடிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் இலவச இணையக் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 23ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்குக் கருத்தரங்கு தொடங்கும். கருத்தரங்கு தொடர்பில் மேல்விவரம் அறியவும் பதிந்துகொள்ளவும் https://us06web.zoom.us/webinar/register/WN_fhomWWSOSrKu2L-e9tY7Vg இணையப்பக்கத்தை நாடலாம்.

