அமைச்சர் சான்: தொடர்ந்து கற்பதே வேலை முறை வாழ்க்கை

அமைச்சர் சான்: தொடர்ந்து கற்பதே வேலை முறை வாழ்க்கை

1 mins read
a53d87f7-dfd1-4524-b3c0-329d9e447df5
-

பள்­ளி­யி­லும் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லும் கற்­பவை யாவும் வெறும் அடிப்­ப­டைக் கல்­வியே. தொடர்ந்து கற்­றலை மேற்­கொள்­வ­து­தான் வேலை முறை வாழ்க்கை என்­றார் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங்.

நேற்று தொடங்கி வெள்­ளிக்­கி­ழமை வரை சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தில் பகுதி பகு­தி­யாக பட்­ட­ம­ளிப்பு விழா நடை­பெற்று வரு­கிறது.

கிட்­டத்­தட்ட 2,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் தங்­க­ளது பட்­டத்­தைப் பெறு­கின்­ற­னர்.

"நாம் தொடக்­கக்­கால கற்­ற­லின்­போது அறிந்­தி­ருப்­பவை எவ்­வ­ளவு என்­பது முக்­கி­ய­மல்ல, எவ்­வ­ளவு விரை­வா­கக் கற்­கிறோம் மற்­றும் கற்­றலை மீண்­டும் மேற்­கொள்­வதே முக்­கி­யம்," என்­றார் திரு சான்.

தொழில்­நுட்­பம் குறித்­தும் அவர் பேசி­னார்.

"தொழில்­நுட்­பம் தொடர்­பில் அச்­சம் கொள்­ளத் தேவை­யில்லை. உல­கில் உள்ள அனை­வ­ருக்­கும் அதே சவால்­கள், அதே வாய்ப்­பு­கள். ஆனால் தொழில்­நுட்­பத்தை எதிர்­கொள்­ளும் துணிச்­சல் என்று வரும்­போது வேறு­ப­டு­கி­றோம்," என்­றார் அவர்.

இவ்­வாண்டு சிங்­கப்­பூ­ரின் முதல் விமான அமைப்­புப் பொறி­யி­யல் திட்­டத்­தின் கீழ் பட்­ட­தாரி­கள் தங்­கள் பட்­டத்­தைப் பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.