அரசாங்க அறிவிப்புக்குப்பின் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் கூடுதல் ஆர்வம்

அரசாங்க அறிவிப்புக்குப்பின் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் கூடுதல் ஆர்வம்

2 mins read
1c4290ae-296e-408b-86f7-25cca7685c79
-

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான வெவ்­வேறு நட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்ட ஒரே வாரத்­தில் கொவிட்-19க்கு எதி­ரான தங்­க­ளது முதல் தடுப்­பூ­சி­யை­யும் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொள்ள மேலும் பலர் முன்­வந்­துள்­ள­னர்.

தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின் கீழ், அக்­டோ­பர் 9 முதல் 15 வரை ஏறத்­தாழ 17,000 பேர் தங்­க­ளது முதல் தடுப்­பூ­சி­யை­யும் 162,000 பேர் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்­ட­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

இதற்கு ஒப்­பு­நோக்க, அக்­டோ­பர் 2 முதல் 8 வரை தங்­க­ளது முதல் தடுப்­பூ­சியை ஏறக்­கு­றைய 11,000 பேரும் பூஸ்­டர் தடுப்­ப­சி­யைக் கிட்­டத்­தட்ட 135,000 பேரும் போட்­டுக்­கொண்­ட­னர்.

உண­வங்­காடி நிலை­யங்­கள் மற்­றும் காப்­பிக்­க­டை­களில் அமர்ந்து உண­வ­ருந்­த­வும் கடைத்­தொ­கு­தி­கள் அல்­லது சுற்­று­லாத் தலங்­க­ளுக்­குச் செல்­ல­வும் இம்­மா­தம் 13ஆம் தேதி­யி­லி­ருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு அக்­டோ­பர் 9ஆம் தேதி­யன்று அறி­வித்­தது.

சமூ­கத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளைப் பாது­காக்­க­வும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் கட்­டமைப்­பின் மீதுள்ள அழுத்­தத்­தைக் குறைக்­க­வும் இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­ட­தாக பணிக்­குழு கூறி­யி­ருந்­தது.

இந்த அறி­விப்பு வெளி­யான சம­யத்­தில் அன்­றா­டத் தொற்று 3,000க்கு மேல் பதி­வாகி வந்­தது.

அறி­விப்பு செய்­யப்­பட்ட அதே நாளில், 30 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தி­னர் தங்­க­ளின் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள பதிந்­து­கொள்­ள­லாம் என்ற அழைப்­பும் விடுக்­கப்­பட்­டது.

அதற்கு முன்­ன­தாக செப்­டம்­பர் 15 முதல் 60 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தில் உள்­ள­வர்­களும் இம்­மா­தம் 3ஆம் தேதி­யி­லி­ருந்து 50 முதல் 59 வய­தி­னர் தங்­க­ளின் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

தடுப்­பூசி தொடர்­பான சிறப்­புப் பய­ணத் தடத் திட்­டம் (விடி­எல்) குறித்து பணிக்­குழு அறி­வித்­த­து­டன் 11 நாடு­க­ளுக்­குத் தனிமை உத்­த­ரவு காலம் ஏது­மின்றி சிங்­கப்­பூ­ரர்­கள் வந்து போக­லாம் என்­றும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், உண­வுக்­க­டை­களில் அமர்ந்து சாப்­பி­ட­வும் விடி­எல் திட்­டத்­தின் கீழ் பய­ணம் செய்­ய­வும் தங்­க­ளின் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வந்­துள்­ள­தாக சிலர் தெரி­வித்­த­னர்.