நம்பிக்கை, மீள்திறனைப் பிரதிபலிக்கும் கிறிஸ்மஸ் ஒளி வெள்ளம்

1 mins read
8a230aa3-349b-41e8-b176-cc6db1941b08
-

இவ்­வாண்­டுக்­கான கிறிஸ்மஸ் உணர்வை கொவிட்-19 சூழ­லால் எவ்­வித பாதிப்­பும் ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் ஆர்ச்­சர்ட் சாலை­யில் கிறிஸ்­மஸ் ஒளி­யூட்­டுக்­குப் பொறுப்பு வகிப்­ப­வர்­கள் உறு­தி­யாக உள்­ள­னர்.

எனவே, மலர்­க­ளைக் கரு­ப்

பொ­ரு­ளா­கக் கொண்ட ஒளி­

யூட்­டுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்டு நட­வ­டிக்­க­கை­களும் கலை­நி­கழ்ச்­சி­களும் இருக்­காது. ஆனால் மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் சிங்­கப்­பூ­ர் ஹோட்டலுக்கு முன்புறம் பெரிய வெளிப்­புற காணொளி ஒளி­ப­ரப்­பப்­படும். மூன்று ஆண்­டு­கள் இடை­வெ­ளிக்­குப் பிறகு பிர­பல கிறிஸ்­மஸ் பாடல்­கள் ஒலிக்­கும் என்று ஆர்ச்­சர்ட் சாலை வர்த்­த­கச் சங்­கம் நேற்று கூறி­யது.

68 கிலோமீட்டர் நீளமுள்ள வண்ண விளக்குகளும் பெரிய அலங்காரங்களும் பார்ப்பவர் கண்களைக் கவரும் வகையில் காட்சிக்கு வைக்கப்படும். நம்­பிக்கை, மீள்­தி­றன்­மிக்க பய­ணத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் இவ்­வாண்­டின் கிறிஸ்­மஸ் ஒளி­யூட்டு அமை­யும் என்று தெரி

­விக்­கப்­பட்­டது.

கிறிஸ்­மஸ் ஒளி­யூட்டு பொது­மக்­களை ஆர்ச்­சர்ட் சாலைக்கு ஈர்க்­கும் என்று சங்­கத்­தின் தலை­வர் மார்க் ஷா நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இதனால் ஆர்ச்சர்ட் சாலையில் வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.