இணைய விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் சொகுசு நாற்காலிகள், கணினி விளையாட்டுக் கருவிகள், மின்னியல் பொருட்களை விற்பதாகக் கூறி 500 பேரிடம் 400,000 வெள்ளி மோசடி செய்ததாக சந்தேகத்தின்பேரில் 25 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் நேற்று கைது செய்தது. நேற்று முன்தினம் இவரிடம் ஏமாந்ததாகக் கூறப்படும் சிலர் அளித்த புகாரை அடுத்து அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார். இணையத்தில் வாங்கிய பொருட்கள் வந்து சேரவில்லை எனவும் அந்தப் புகாரில் அவர்கள் தெரிவித்தாக போலிஸ் தெரிவித்தது. 'கரோசெல்' இணையத் தளத்தில் தள்ளுபடி விலையில் தரப்படுவதாக இருந்த விளம்பரத்தைக் கண்டு மயங்கி, அவர்கள் 'பேநவ்' மற்றும் வங்கி பணப்பரிமாற்றம் ஆகியவை வழியாகப் பணம் செலுத்தியது தெரியவந்துள்ளது.
500 பேரிடம் 400,000 இணைய மோசடி
1 mins read
-

